Don't Miss!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'பிரபாகரன்': திருமா, சீமான், சத்யராஜ் எதிர்ப்பு
சிங்கள இயக்குநர் பெரீஸ் இயக்கியுள்ள பிரபாகரன் படத்தின் பிரிண்டுகள் சென்னை ஜெமினி லேபில் போடும் முயற்சி நடந்தது. இதை அறிந்த தமிழர் அமைப்புகள் மற்றும் திரைத்துறையினர் இணைந்து அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். மேலும், படத்தின் இயக்குநர் பெரீஸுக்கும் சரமாரியாக அடி விழுந்தது.
இந்த நிலையில், இப்படத்தை நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரில் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் தங்கர்பச்சான், சீமான், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்பட பலர் பார்த்தனர்.
படத்தைப் பார்த்து முடித்து விட்டு வந்த அனைவருமே இப்படம் இலங்கைத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
இலங்கை தமிழர்களையும், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் வகையில் படம் உள்ளது. இது திரையிடப்பட்டால், தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும்.
எனவே, இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறோம் என்று அவர்கள்
தெரிவித்தனர்.