Don't Miss!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- News ரூ.173.85 கோடி பறிமுதல்! இலவச பொருள்களோ 35.78 கோடி! எங்கே போகிறது தமிழ்நாடு?
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பிரபாகரன்': திருமா, சீமான், சத்யராஜ் எதிர்ப்பு
சிங்கள இயக்குநர் பெரீஸ் இயக்கியுள்ள பிரபாகரன் படத்தின் பிரிண்டுகள் சென்னை ஜெமினி லேபில் போடும் முயற்சி நடந்தது. இதை அறிந்த தமிழர் அமைப்புகள் மற்றும் திரைத்துறையினர் இணைந்து அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். மேலும், படத்தின் இயக்குநர் பெரீஸுக்கும் சரமாரியாக அடி விழுந்தது.
இந்த நிலையில், இப்படத்தை நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரில் திருமாவளவன், நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் தங்கர்பச்சான், சீமான், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்பட பலர் பார்த்தனர்.
படத்தைப் பார்த்து முடித்து விட்டு வந்த அனைவருமே இப்படம் இலங்கைத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.
இலங்கை தமிழர்களையும், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தும் வகையில் படம் உள்ளது. இது திரையிடப்பட்டால், தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும்.
எனவே, இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறோம் என்று அவர்கள்
தெரிவித்தனர்.