சமீராவுக்கு அடித்த ஜாக்பாட்!
கிட்டத்தட்ட ஜாக்பாட் அடித்த சந்தோஷத்திலிருக்கிறார் சமீரா ரெட்டி. இருக்காதா பின்னே...
கீதாஞ்சலி நிறுவனத்தின வைர, தங்க நகைகளுக்கு புதிய விளம்பரத் தூதர் என்ற கவுரவமும், பல கோடி வருமானமும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டினால் யாருக்குத்தான் சந்தோஷமாக இருக்காது.
இந்த நிறுவனம் புதிதாக அறிமுகப் படுத்தவுள்ள ரிவாஸ் தங்க நகைகளுக்கு சமீரா ரெட்டிதான் மாடல்.
சமீராவை தேர்ந்தெடுக்கக் காரணமே மக்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கு மற்றும் அவரது சிறப்பான பாடி லாங்குவேஜ்தான்.
நவீனத்துவமும், பாரம்பரிய அழகும் ஒருங்கே அமையப்பட்ட ஒரு சில நடிகைகளில் முதன்மையானவர் சமீரா எனப் புகழ்ந்து தள்ளுகிறார் ரிவாஸ் நகைப் பிரிவின் லைவர் ஆர்.கே.மேனன்.
இந்த புதிய பொறுப்புக்காக பல கோடி சம்பளமாகத் தரப்பட்டுள்ளது சமீராவுக்கு. எவ்வளவு தொகை என்பதை வெளிப்படையாக்க் கூற முடியாது என்கிறார்கள் மேனனும் சமீராவும்.
இப்போதெல்லாம் பிரபலமாகும்வரைதான் திரை வாய்ப்புக்காக ஆலாய் பறக்கிறார்கள் நடிகைகள். பிரபலமடைந்த பின்னர் விளம்பர வாய்ப்புகளில்தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். குறைந்த வேலை... கோடிகளில் சம்பளம் என்பதால் இந்நிலை.
இந்தியில் இப்படி வாய்ப்புகளைப் பெறுவதில் ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், சமீரா ரெட்டி மற்றும் ஷில்பாவுக்கிடையே கடும் போட்டியே நிலவுகிறது. கடந்த மாதம்தான் ஐஸ்வர்யாவிடமிருந்து டிபியர்ஸ் வைரங்களின் விளம்பரத்தூதர் வாய்ப்பை கத்ரீனா தட்டிப் பறித்தது நினைவிருக்கும்.


Click it and Unblock the Notifications











