twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மண்ணையும் மனிதர்களையும் உயிர்ப்புடன் காட்டும் தென்மேற்கு பருவகாற்று'

    By Sudha
    |

    Thenmerku Paruvakatru Movie
    மண்ணையும் மனிதர்களையும் உயிர்ப்புடன் காட்டிய படம் என்று தென்மேற்கு பருவக் காற்றுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் தெரிவித்துள்ளார்.

    இந்தப் படம் குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழ் கிராமத்தின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியுள்ள தென்மேற்குப் பருவக்காற்று படம்.

    ஒரு மனிதன் எத்தனையோ உறவுகளுடன் பயணிக்கலாம். ஆனால் தாய்க்கு நிகர் யாருமில்லை என்பதை சரண்யா வாழ்ந்து காட்டியுள்ளார்.

    இதில் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சில் குத்திட்டு நிற்கிறது. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே நெக்குருக வைக்கிறது.

    படம் முடிந்து வெளியே வரும் போது, நாம் தவற விட்ட வாழ்க்கையையும் கண்முன் இழந்த விட்ட மனித உறவுகளையும் எண்ணி கனத்தை மனதுடன் பெருமூச்செறிய வைக்கிறது, என்று கூறியுள்ளார்.

    English summary
    Director Seeman praises the director of Thenmerku Paruvakatru for the sensational portrayal of village life and motherhood in the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X