Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்று இரவு பஹாமாஸுக்கு ஹனிமூன் கிளம்புகிறார் ஷில்பா
லண்டனைச் சேர்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும், ஷில்பாவுக்கும் சமீபத்தில் மும்பையில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் ஜோடியாக திருப்பதி வந்து அங்கு ஏழுமலையானை வழிபட்டார் ஷில்பா. அவருடன் ஷில்பாவின் அம்மா, தங்கை ஷமீதா ஷெட்டி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
திருப்பதியில் கணவருடன் பய பக்தியுடன் சாமி கும்பிட்டார் ஷில்பா.
பின்னர் குந்த்ரா - ஷில்பா ஜோடிக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதம், லட்டு கொடுக்கப்பட்டது.
தரிசனத்திற்குப் பின்னர் வெளியில் வந்த ஷில்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நானும் எனது கணவரும் இன்று இரவு தேனிலவுக்காக அமெரிக்காவில் உள்ள பஹாமாஸ் தீவுக்கு செல்கிறோம். அங்கு 2 வாரம் வரை தங்குவோம்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில்தான் குடும்பம் நடத்தப் போகிறோம்.
ராஜ் குந்த்ரா என்னைப் புரிந்து வைத்திருக்கிறார். அவரை மணந்தது பாக்கியமாக கருதுகிறேன். எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடு வரவும் வாய்ப்பே இல்லை என்றார் ஷில்பா.