Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்று இரவு பஹாமாஸுக்கு ஹனிமூன் கிளம்புகிறார் ஷில்பா
லண்டனைச் சேர்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கும், ஷில்பாவுக்கும் சமீபத்தில் மும்பையில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் ஜோடியாக திருப்பதி வந்து அங்கு ஏழுமலையானை வழிபட்டார் ஷில்பா. அவருடன் ஷில்பாவின் அம்மா, தங்கை ஷமீதா ஷெட்டி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
திருப்பதியில் கணவருடன் பய பக்தியுடன் சாமி கும்பிட்டார் ஷில்பா.
பின்னர் குந்த்ரா - ஷில்பா ஜோடிக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதம், லட்டு கொடுக்கப்பட்டது.
தரிசனத்திற்குப் பின்னர் வெளியில் வந்த ஷில்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நானும் எனது கணவரும் இன்று இரவு தேனிலவுக்காக அமெரிக்காவில் உள்ள பஹாமாஸ் தீவுக்கு செல்கிறோம். அங்கு 2 வாரம் வரை தங்குவோம்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில்தான் குடும்பம் நடத்தப் போகிறோம்.
ராஜ் குந்த்ரா என்னைப் புரிந்து வைத்திருக்கிறார். அவரை மணந்தது பாக்கியமாக கருதுகிறேன். எங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடு வரவும் வாய்ப்பே இல்லை என்றார் ஷில்பா.