Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
நடிகர் விஜயகுமார் குடும்ப வழக்கு சென்னைபுறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதா தனது தந்தையும், அண்ணன் அருண் விஜயும் தன்னைத் தாக்கியதாக மதுரவாயல் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து விஜயகுமார் வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் தன்னைத் தாக்கி கையை உடைத்ததாக போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் மதுரவாயல் போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர். பின்னர் ஆனந்தராஜ் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே வனிதா டிஜிபி ல்த்திகா சரணைச் சந்தித்து தனது தந்தை மற்றும் அண்ணன் மீது புகார் அளித்தார். மேலும், நிருபர்களைச் சந்தித்து தனது தந்தை வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் அதை விரைவில் அனைவருக்கும் தெரிவிக்கப்போவதாகவும் கூறினார்.
வனிதா கொடுத்த புகாரின்பேரில் நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண்விஜய் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி தந்தையும், மகளும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் விஜயகுமார் மற்றும் வனிதா கொடுத்த புகார்களின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சென்னை புறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.