Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார்-வனிதா
விஜயக்குமார்- வனிதா விவகாரம் தற்போது அமைதியாகத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. போலீஸ் தரப்பில் மறைமுகமாக, விஜயக்குமார் சார்பில் வனிதாவிடம் சமரசம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இது வனிதாவின் பேட்டியிலிருந்து தெரிய வருகிறது.
விஜயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் படு வேகமாக வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் வனிதா கொடுத்த புகாரின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தனது தந்தை விஜயக்குமார், விஜயக்குமாரின் முதல் மனைவிக்குப் பிறந்த நடிகர் அருண் விஜய் ஆகியோர் மீது வனிதா புகார் கொடுத்துள்ளார். ஆனால் இருவரும் கைது செய்யப்படவில்லை.
இரு தரப்பும் மாறி மாறி புகார்களைக் கூறி வருகிறது. விஜயக்குமார் குடும்பத்தில் நடந்தவற்றை, நடப்பவற்றைக் கூறினால் அசிங்கமாகி விடும் என்கிறார் வனிதா. விஜயக்குமாரை வீழ்த்தும் கடைசி ஆயுதம் என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மறுபக்கம், வனிதாவை எனது மகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன் என்கிறார் விஜயக்குமார்.
இந்த நிலையில் வனிதா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், எனது தந்தை விஜயகுமார் வெளியில் இருந்து கொண்டே என்னைப்பற்றி அவதூறாக பேட்டி அளித்து வருகிறார். அருண்விஜய் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.
போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் போனில் என்னுடன் அரைமணி நேரம் பேசினார். அப்போது அவர் விஜயகுமாருடன் சமாதானமாக போகும்படி கேட்டுக் கொண்டார்.
எனது கணவர் மீது பொய் புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளி விட்டனர். இதனால் நானும், குழந்தைகளும் அடைந்த வேதனைக்கு அளவில்லை. தனது தவறை உணர்ந்து என் கணவர் மீதான வழக்கை விஜயகுமார் முதலில் வாபஸ் பெறட்டும். அதன் பிறகு சமாதானம் பற்றி பேசலாம் என்றார் அவர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!