Don't Miss!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என் கணவர் மீதான வழக்கை விஜயக்குமார் வாபஸ் பெற்றால் சமரசம் பேசத் தயார்-வனிதா
விஜயக்குமார்- வனிதா விவகாரம் தற்போது அமைதியாகத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. போலீஸ் தரப்பில் மறைமுகமாக, விஜயக்குமார் சார்பில் வனிதாவிடம் சமரசம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இது வனிதாவின் பேட்டியிலிருந்து தெரிய வருகிறது.
விஜயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் படு வேகமாக வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் வனிதா கொடுத்த புகாரின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தனது தந்தை விஜயக்குமார், விஜயக்குமாரின் முதல் மனைவிக்குப் பிறந்த நடிகர் அருண் விஜய் ஆகியோர் மீது வனிதா புகார் கொடுத்துள்ளார். ஆனால் இருவரும் கைது செய்யப்படவில்லை.
இரு தரப்பும் மாறி மாறி புகார்களைக் கூறி வருகிறது. விஜயக்குமார் குடும்பத்தில் நடந்தவற்றை, நடப்பவற்றைக் கூறினால் அசிங்கமாகி விடும் என்கிறார் வனிதா. விஜயக்குமாரை வீழ்த்தும் கடைசி ஆயுதம் என்னிடம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மறுபக்கம், வனிதாவை எனது மகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன் என்கிறார் விஜயக்குமார்.
இந்த நிலையில் வனிதா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், எனது தந்தை விஜயகுமார் வெளியில் இருந்து கொண்டே என்னைப்பற்றி அவதூறாக பேட்டி அளித்து வருகிறார். அருண்விஜய் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.
போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் போனில் என்னுடன் அரைமணி நேரம் பேசினார். அப்போது அவர் விஜயகுமாருடன் சமாதானமாக போகும்படி கேட்டுக் கொண்டார்.
எனது கணவர் மீது பொய் புகார் கொடுத்து அவரை சிறையில் தள்ளி விட்டனர். இதனால் நானும், குழந்தைகளும் அடைந்த வேதனைக்கு அளவில்லை. தனது தவறை உணர்ந்து என் கணவர் மீதான வழக்கை விஜயகுமார் முதலில் வாபஸ் பெறட்டும். அதன் பிறகு சமாதானம் பற்றி பேசலாம் என்றார் அவர்.