Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விஜயக்குமாருடன் மோதி வரும் மகள் வனிதா அரசியலில் குதிக்கிறார்
விஜயக்குமார் குடும்பத்துடன் மிகக் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார் வனிதா. தற்போது அவருக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
மகன் விஜய ஸ்ரீஹரி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக விஜயக்குமார், ஆகாஷ் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார் வனிதா. குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ள போதிலும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் வைத்து தந்தை விஜயக்குமாருடன் கடும் அடிதடியில் குதித்தார் வனிதா. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது மகன் என்னிடம் வந்து சேரும் வரை நான் விட மாட்டேன். இறுதி வரை போராடுவேன். யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். அவரது துணையுடன் கடுமையாக போராடுவேன். எனது மகனை நான் விட்டுத் தர மாட்டேன்.
9 வருடம் நான் அவனை வளர்த்தேன். ஆனால் என்னிடம் வர மாட்டேன் என்று அவன் கூறுகிறான். அந்த அளவுக்கு அவனைக் குழப்பி வைத்துள்ளனர் என்றார் வனிதா.
பின்னர் அவரே ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றவுள்ளேன். விரைவில் நான் அக்கட்சியில் சேருவேன் என்றார். எந்தக் கட்சி என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுகுறித்து இப்போது சொல்ல முடியாது என்றார் வனிதா.