Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விஜயக்குமாருடன் மோதி வரும் மகள் வனிதா அரசியலில் குதிக்கிறார்
விஜயக்குமார் குடும்பத்துடன் மிகக் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளார் வனிதா. தற்போது அவருக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
மகன் விஜய ஸ்ரீஹரி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக விஜயக்குமார், ஆகாஷ் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார் வனிதா. குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ள போதிலும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் வைத்து தந்தை விஜயக்குமாருடன் கடும் அடிதடியில் குதித்தார் வனிதா. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது மகன் என்னிடம் வந்து சேரும் வரை நான் விட மாட்டேன். இறுதி வரை போராடுவேன். யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். அவரது துணையுடன் கடுமையாக போராடுவேன். எனது மகனை நான் விட்டுத் தர மாட்டேன்.
9 வருடம் நான் அவனை வளர்த்தேன். ஆனால் என்னிடம் வர மாட்டேன் என்று அவன் கூறுகிறான். அந்த அளவுக்கு அவனைக் குழப்பி வைத்துள்ளனர் என்றார் வனிதா.
பின்னர் அவரே ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றவுள்ளேன். விரைவில் நான் அக்கட்சியில் சேருவேன் என்றார். எந்தக் கட்சி என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுகுறித்து இப்போது சொல்ல முடியாது என்றார் வனிதா.