Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சென்னையில் மாரத்தான்-நடிகை சினேகா பங்கேற்றார்
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் (21 கிலோ மீட்டர்), அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் 7 கிலோ மீட்டர் ஓட்டம், மாற்றுத் திறனாளிக்கான வீல் சேர் ஓட்டம் (500 மீட்டர்) ஆகிய 4 பிரிவுகளில் போட்டி நடந்தது. முதலில் ஆண்களுக்கான மினி மராத்தான் பந்தயம் நடந்தது. இதில் 1,800 பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியன், நடிகை சினேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிரம்ஸ் சிவமணியின் இசையுடன் அண்ணா சதுக்கத்தில் இருந்து தொடங்கிய ஓட்டம், சாந்தோம், அடையாறு, பெசன்ட் நகர், வேளாங்கண்ணி சர்ச் வழியாக சென்று அதே வழியாக திரும்பி வந்தனர். அதை தொடர்ந்து பெண்களுக்கான மினி மராத்தான் நடந்தது.
3-வதாக அனைத்து பிரிவினருக்கான 7 கிலோ மீட்டர் தூர ஓட்டம் நடந்தது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பந்தயம் அண்ணா சதுக்கத்தில் தொடங்கி கண்ணகி சிலை, திருவல்லிக் கேணி, பல்லவன் போக்குவரத்து சிக்னல், சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது.
21 கிலோமீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த முகேந்தர் சந்தோஸ் 3 லட்சத்தை தட்டிச் சென்றார்.