Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் தங்கையின் பரிதாப நிலை- டிஸ்கோ சாந்தி
நடிகர் பிரகாஷ்ராஜ், கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதகுமாரியை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.
இந் நிலையில், பிரகாஷ்ராஜுக்கும், லலிதகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்துக்கு கோர்ட்டில் மனு செய்து இருக்கிறார்கள்.
லலிதகுமாரி 2 குழந்தைகளுடன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், நீலாங்கரையில் வசிக்கிறார்.
தங்கையின் நிலை குறித்து நடிகை டிஸ்கோ சாந்தி கூறுகையில்,
என் தங்கை லலிதகுமாரியை பிரகாஷ்ராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வடபழனி முருகன் கோவிலில்தான் திருமணம் நடந்தது.
ஆரம்பத்தில் ஒழுங்காக குடும்பம் நடத்தி வந்த பிரகாஷ்ராஜ், நாளடைவில் மாற ஆரம்பித்தார். நிறைய பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருக்கும், என் தங்கைக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று புத்திமதி சொன்னேன். பிரகாஷ்ராஜ் கேட்கவில்லை.
இப்போது என் தங்கை தனியே வசிக்கிறாள். 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ரொம்பவே கஷ்டப்படுகிறாள். அவளுக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை. குடி தண்ணீர் சப்ளை செய்வதைக் கூட நிறுத்தி விட்டார்.
கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மாதந்தோறும் ரூ.50,000 என் தங்கை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன். என் தங்கையின் மூத்த மகள் பூஜா, சமீபத்தில் பெரியவளானாள். அவளுக்கு நகைகள் செய்து போட்டு நான்தான் சடங்கு நிகழ்ச்சியைக்கூட நடத்தினேன்.
சொந்த மகளின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட பிரகாஷ்ராஜ் வந்து வாழ்த்தவில்லை. அவர் யார் யாருக்கோ செலவு செய்கிறார். ஆனால் தன் சொந்த குழந்தைகளுக்கு துணி வாங்கிக் கொடுக்கக் கூட அவருக்கு மனமில்லை.
எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகள் கிடையாது. என் தங்கை மகள்களைத்தான் சொந்த மகள்களாக நினைக்கிறேன்.
நன்றாக இருந்த என் தங்கையின் வாழ்க்கையை இப்படியாக்கிவிட்டாரே பிரகாஷ் ராஜ் என்று கூறியுள்ளார் டிஸ்கோ சாந்தி.