பங்கு வர்த்தகத்தில் மோகன் லால்!

துபாயில் ஹோட்டல் பிஸினெஸ், சினிமா திரையரங்கங்கள், மல்டிபிளக்ஸ்கள் என தனது வியாபார எல்லைகளை விஸ்தரித்து வந்த அவர், இப்போது பங்கு வர்த்தகத்திலும் தீவிரமாக இறங்கிவிட்டார்.
இதற்காக, பேபி மரைன் எக்ஸ்போர்ட்ஸ், பெடக்ஸ் செக்யூரிட்டீஸ், ஸ்மார்ட் பைனான்சியல், தாக்கர் குரூப் மற்றும் தொழிலதிபர் எஸ்.எம்.ஷெக்டே போன்றோருடன் கைகோர்த்துள்ளார்.
இதற்காக மோகன் லால் துவங்கியுள்ள நிறுவனம் 'ஹெட்ஜ் ஈகுவிட்டீஸ்'. இந்த நிறுவனம் விரைவில் தன் செயல்பாடுகளை துவக்க விருக்கிறது. கேரள அரசின் ஜியோஜித் பைனான்ஸூக்கு நிகராக இந்நிறுவனத்தின் வணிகத்தைப் பெருக்கும் முயற்சிகளில் தீவிரமாக உள்ளார் மோகன்லால்.
எனவேதான் கேரளா முழுவதும் 15 கிளைகள் திறக்கப்பட உள்ளதோடு, தமிழகம், ஆந்திராவிலும் கூட கூடுதலாக கிளைகள் திறக்க முடிவெடுத்துள்ளார் மோகன்லால்.
ஜியோஜித் போலவே, பங்கு வர்த்தகம், பரஸ்பர நிதி உட்பட பல வகையான நிதி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு 'ஹெட்ஜ் ஈகுவிட்டீஸ்' வழங்க உள்ளது.
இந்திய அளவில் பங்கு வர்த்தகத்தில் இவ்வளவு பிரமாண்டமான திட்டங்களுடன் ஈடுபடும் முதல் நடிகர் மோகன்லால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











