Don't Miss!
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- News "அது அவ்ளோதான்.. முடிஞ்ச்!" பாஜக இந்த முறை 150ஐ தாண்டாது என.. கணித்த ராகுல் காந்தி
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
'நடிகர்களுக்கு ஹைதராபாதில் இடமில்லை!'
ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரி தெலுங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் பிரச்சினையில் டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவுக்கு முழு பெருமையும் போய்விடக் கூடாது என்பதால் காங்கிரஸ் கட்சி போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக சினிமா நடிகர்களைக் குறி வைத்து தெலுங்கானா போராட்டக்காரர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவுட்டோரில் படப்பிடிப்பே நடக்க முடியாத நிலைஇருப்பதால், பல தெலுங்கு பட அதிபர்கள் சத்தமில்லாமல் சென்னைக்கு கிளம்பிவிட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜீவன் ரெட்டி ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தெலுங்கானா தனி மாநிலத்திற்கு தற்போது ஹைதராபாத்தில் தங்கி உள்ள நடிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
தெலுங்கானாவை ஆதரிக்காத நடிகர்களுக்கு ஹைதராபாத்தில் என்ன வேலை? அவர்களுக்கு இனி இங்கே இடம் கிடையாது. அவர்கள் உடனடியாக ஹைதராபாத்தை விட்டு உடனடியாக அவர்கள் வெளியேற வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இல்லாவிட்டால் நடிகர்கள் வையை மூடிக்கொண்டு தங்கள் வேலையை மட்டும் பார்க்கட்டும். யாராவது தெலுங்கானா பற்றி தொடர்ந்து விமர்சித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள்..." என்று கூறியுள்ளார்.