Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விடிய, விடிய நடந்த விஜயகுமார் - வனிதா தகராறு.. ஆகாஷ் அம்மாவிடம் குழந்தை ஒப்படைப்பு
எனவே விஜய் ஸ்ரீஹரியை முதல் கணவர் ஆகாஷின் தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதாவுக்கும், அவருடைய முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. அவனை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி வனிதா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2 வாரத்திற்குள் விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 23-ந் தேதி ஆகாஷுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜயகுமார் தனது பேரன் விஜய் ஸ்ரீஹரியுடன் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். இதை அறிந்த வனிதா தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் விமான நிலையத்திற்குச் சென்றார்.
அப்போது விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களை பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டிக்பால் மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
நடிகர் விஜயகுமாரிடம், விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் தனியறையில் விசாரணை நடத்தினார். அப்போது அறையின் கதவை திறந்துக் கொண்டு வனிதா உள்ளே சென்று மகனைப் பறிக்க முயன்றார். போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஒருவரையொருவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்கள்.
மேலும் போலீஸ் நிலையத்தில் வனிதா போலீஸ் அதிகாரிகளை திட்டி தனது மகனை ஒப்படைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்றார். இரவு 3 மணி வரை அவர்களிடம் விசாரணை நடந்தது.
பாட்டியுடன் ஒப்படைப்பு
இதற்கிடையே ஆகாஷுக்கு போலீசார் தகவல் அளித்தனர். இதையடுத்து ஆகாஷின் அம்மா மகேஸ்வரி அதிகாலை 3 மணிக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அவருடன் விஜய் ஸ்ரீஹரியை அனுப்பக் கூடாது என்று வனிதா கூறினார். பின்னர் அங்கிருந்த விஜயகுமாரை போலீசார் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். வனிதாவை அவருடைய கணவர் ஆனந்தராஜ் மற்றும் நண்பர்கள் அழைத்து சென்றனர்.
டெல்லியில் இருந்த ஆகாஷ் விமான நிலைய போலீசாருக்கு பேக்ஸ் மூலம் செய்தி அனுப்பினார். அதில், விஜய் ஸ்ரீஹரியை, விஜயகுமாருடன் நான் தான் அனுப்பி வைத்தேன். தற்போது பிரச்சினை ஏற்பட்டு உள்ளதால் குழந்தையை எனது தாயார் மகேஸ்வரியுடன் அனுப்பி வையுங்கள். நான் சென்னை வந்து போலீசார் முன் விளக்கம் அளிக்கிறேன்,' என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து காலை 8 மணிக்கு சிறுவன் விஜய் ஸ்ரீஹரியை போலீசார் ஆகாஷின் தாய் மகேஸ்வரியுடன் அனுப்பி வைத்தனர்.
பேரன் விஜய் ஸ்ரீ ஹரி விவகாரத்தில் விஜயகுமாரும் அவர் மனைவி மஞ்சுளாவும் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாது என உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!