Don't Miss!
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அதிசய மனிதர் ரஜினி!-அமிதாப் வியப்பு
இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இந்திய நடிகர்களுக்கு மிகச் சிறந்த முன் மாதிரியாக அமிதாப் திகழ்வதாகவும் ரஜினி கூறினார்.
இந்தச் சந்திப்பு குறித்து அமிதாப் தனது பிளாக்கில் கூறியுள்ளதாவது:
"ரோபோ படப்பிடிப்புக்காக ஐஸ்வர்யா ராயுடன் லோனாவாலா பகுதிக்கு வந்திருந்த நண்பர் ரஜினிகாந்த் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.
எனக்கும் ரஜினிக்கும் நீண்ட கால பழக்கம். இருவரும் பல படங்களில் நடித்துள்ளோம். நிறைய விஷயங்களைப் பேசியுள்ளோம். எங்கள் நட்பில் அன்றும் இன்றும் எந்த மாறுதலுமில்லை.
சென்னையில் அவருக்காக பா சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்திருந்தோம். படம் பார்த்த பிறகு முதல் முறையாக என்னை அவர் இப்போது பார்க்க வந்திருந்தார். படம் பார்த்து முடித்ததுமே என்னிடம் பேச அவர் முயன்றும், பேச முடியாமல் போனது.
பா படம் குறித்தும் எனது நடிப்பு பற்றியும் ரஜினி மிக உயர்வாகப் பேசினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்தும் மேல் அவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்னிடம் கூறுகையில், 'உங்களுடைய பா படம் பார்த்துவிட்டு உண்மையில் நாங்கள் திகைத்துப் போனோம். அது படத்தின் கதை மற்றும் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளால் மட்டுமல்ல, உங்களது அற்புதமான நடிப்பைப் பார்த்ததினால். இனி நாங்கள் என்ன செய்யப் போகிறோம்...!' என்றார்.
கலையுலக நண்பர் ஒருவருடன் படைப்புலகம், வாழ்க்கை, நம்மைச் சுற்றி நிகழும் விஷயங்கள் குறித்துப் பேசுவது ஒரு இனிய அனுபவம். அந்த அனுபவத்தை ரஜினி எனக்குத் தந்தார் இன்று.
ரஜினியின் வாழ்க்கை ஒரு அதிசயம்... ஒரு பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று ஏராளமான ரசிகர்களின் மனதில் கடவுளுக்கு நிகராய் அமர்ந்திருக்கும் மனிதர் அவர். ஆனாலும் இன்றும் அதே எளிமையைத் தொடர்கிறார்" என்று எழுதியுள்ளார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!