Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜூலை 2 முதல் தெலுங்கு சிங்கம்
யமுடு என்ற பெயரில் சிங்கம் படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். இந்த பதிப்பு ஜூலை 2ம் தேதி ஆந்திரா முழுவதும் ரிலீஸாகிறது.
இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சூர்யா, அனுஷ்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சூர்யா பேசுகையில், நான் தெலுங்கு ரசிகர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் எனது தெலுங்குப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இது எனது 25வது படம். ஹரி இயக்கத்தில் 3வது படம். தமிழ்நாட்டில் 550 பிரிண்டுகளுடன் படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் அனுஷ்காவின் தீவிர ரசிகன். அவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளது பெருமையாக இருக்கிறது என்றார்.
பேட்டியின்போது அனுஷ்கா கூறியதுதான் பெரிய ஹைலைட். அதாவது இன்னும் சிங்கம் படத்தை இதுவரை பார்க்கவில்லையாம் அனுஷ்கா. ஆனால் டப்பிங் பதிப்பை அவர் பார்த்து விட்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் நான் சிங்கம் படத்தை பார்க்கவில்லை. ஆனால் யமுடு படத்தைப் பார்த்தேன். டப்பிங் படம் போலவே தெரியவில்லை.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசை மயக்குகிறது. அதிரடியாக இருக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் விரும்புவார்கள்.
நான் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்தாலும் கூட தெலுங்குக்குத்தான் எப்போதும் முன்னுரிமை தருவேன் என்றார்.
நல்லா சொன்னாங்கப்பா நச்சுன்னு..!