Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
"வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்... சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வேன்!" - ஆகாஷ்
நடிகை வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் இடையே விவாகரத்து கொடுக்கப்பட்ட வழக்கில் மகன் விஜய் ஸ்ரீஹரி ஆகாஷிடமும், மகள் ஜோவிகா வனிதாவிடமும் இருக்கவேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் ஆகாஷ் மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் ஹைதராபாத் சென்று விட்டார். 2008-ம் ஆண்டு ஆகாஷ் வசம் இருக்கும் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி செகந்திராபாத் நீதிமன்றத்தில் வனிதா வழக்கு தொடர்ந்தார். அதன் படி விஜய் ஸ்ரீஹரி அவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே வனிதாவுக்கும், விஜயகுமாருக்கும் ஏற்பட்ட தகராறில் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் அழைத்துச்சென்றார்.
இது தொடர்பாக வனிதா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் 2 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், யாரிடம் இருக்க வேண்டும் என்பதை குடும்ப நல நீதிமன்றத்தில் முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே நடிகர் ஆகாஷ் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் வனிதா வசம் இருக்கும் மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் சட்டப் பூர்வமாக ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம், நடிகை வனிதா இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டு இருந்தார்.
அதன்படி வனிதா இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார். இதேபோல் ஆகாஷ், விஜய் ஸ்ரீஹரியுடன் ஆஜரானார்.
அப்போது வனிதா பதில் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை ஜனவரி 5-ந்தேதிக்கு பின்னர் தள்ளி வைக்கவேண்டும் என்றும் கேட்டார்.
இதற்கு ஆகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். விஜய் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல விரும்ப வில்லை என்றும், வழக்கை முன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் நீதிபதியிடம் வனிதா கெஞ்சி கேட்டுக் கொண்டதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய போவதாக ஆகாஷ் தரப்பு வக்கீல் சசிகுமார் தெரிவித்துள்ளார்.