Don't Miss!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நடிகை ஜெயசுதா கைதாகி விடுதலை!
ஆந்திரா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ஜெயசுதா களமிறங்கியுள்ளார். இந்தத் தொகுதியில் தேர்தல்கள் முடிந்துவிட்டன.
ஆனால் தேர்தலுக்கு முன் நடிகை ஜெயசுதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்ததாலா, அவரை ஆந்திர போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடந்த 3ம் தேதி நாமாலகுண்டு செளரஸ்தா என்னும் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் ஜெயசுதா. அப்போது சாலையின் மத்தியில் கட்சி கொடியேற்றி, வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் இவர் நடந்து கொண்டாராம்.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று அனைத்துக் கட்சி தலைவர்களும், பொது மக்களும் சிலகலகூடா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதை விதாரித்த போலீசார், மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் ஜெயசுதா திறந்து வைத்த தேர்தல் அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். கட்சி கொடிக் கம்பத்தையும், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனர். ஜெயசுதா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் போலீசார் அனுமதி பெறாமலேயே கடந்த 14-ம் தேதி உஸ்மானியாவிலிருந்து சாலை தேர்தல் பிரச்சாரம் செய்ததும் புகாராகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த இரு புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜெயசுதா கைது செய்யப்பட்டார். பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.