Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகை ஜெயசுதா கைதாகி விடுதலை!
ஆந்திரா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ஜெயசுதா களமிறங்கியுள்ளார். இந்தத் தொகுதியில் தேர்தல்கள் முடிந்துவிட்டன.
ஆனால் தேர்தலுக்கு முன் நடிகை ஜெயசுதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் எழுந்ததாலா, அவரை ஆந்திர போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடந்த 3ம் தேதி நாமாலகுண்டு செளரஸ்தா என்னும் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் ஜெயசுதா. அப்போது சாலையின் மத்தியில் கட்சி கொடியேற்றி, வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் இவர் நடந்து கொண்டாராம்.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று அனைத்துக் கட்சி தலைவர்களும், பொது மக்களும் சிலகலகூடா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதை விதாரித்த போலீசார், மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் ஜெயசுதா திறந்து வைத்த தேர்தல் அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். கட்சி கொடிக் கம்பத்தையும், தேர்தல் அலுவலகத்தில் இருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனர். ஜெயசுதா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் போலீசார் அனுமதி பெறாமலேயே கடந்த 14-ம் தேதி உஸ்மானியாவிலிருந்து சாலை தேர்தல் பிரச்சாரம் செய்ததும் புகாராகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த இரு புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜெயசுதா கைது செய்யப்பட்டார். பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.