twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமணத்துக்கு மும்பையில் உடை வாங்கும் கார்த்தி

    By Shankar
    |

    Ranjini and Karthi
    நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. இதற்காக தனக்கும் எதிர்கால மனைவிக்குமான உடைகளை மும்பையில் டிசைன் செய்து வாங்குகிறார் கார்த்தி.

    கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

    தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் வேகமாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப் புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

    மறுநாள் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணமகன், மணமகள் இருவரும் அணிவதற்காக பிரத்தியேக ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

    இந்த ஆடைகளை தேர்வு செய்வதற்காக நடிகர் கார்த்தி மும்பை சென்றுள்ளார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள பிரபல துணிக் கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள்.

    திருமண வரவேற்புக்கும் இங்கேயே உடைகளை வாங்குகிறார் கார்த்தி.

    English summary
    Actor Karthi visits popular textile shops in Mumbai to purchase his marriage costumes. The Marriage will be held on July 3rd in Coimbatore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X