Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'மிருகம்' மாதிரி கதை வேணும்!
மிருகம் திரைப்படம் துவக்கத்தில் பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும் ஒரு சமூக அக்கறையுள்ள படமாக வெளிவந்து அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றதில் அதன் தயாரிப்பளர் மற்றும் இயக்குநருக்கு ஏக சந்தோஷம். வணிக ரீதியாகவும் இப்படம் இருவருக்குமே அதிக லாபத்தை பெற்று தந்துள்ளது.
இப்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பதற்காக இப்படத்தில் புதிதாக சில காட்சிகளைச் சேர்த்து அனுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் சாமி.
இந்தப் புதிய பதிப்பில் பாலியல் தொடர்பான இன்னும் சில காட்கள் இடம் பெறப் போகிறதாம். நம் ஊரில் தான் இதுபோன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பும். ஆனால் வெளிநாடுகளில் இந்த பாலியல் தொடர்பான காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பாது என்பதால் தாராளமாக இக்காட்சிகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் சாமி.
இந் நிலையில் மிருகம் படத்தின் தயாரிப்பாளரான கார்த்திகேயன் புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார். மிருகம் படத்தைப் போலவே சமூக அக்கறை உள்ள புதிய படங்களை எடுக்கும் முயற்சிதான் அது. இவருடைய அடுத்த படத்தில், சமூகத்தில் அரவாணிகள் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்லும் கதையைக் எடுத்துள்ளாராம்.
இப்படத்தை இயக்குபவர் மிருகம் படத்தில் காமெடி காட்சிகளுக்கு உதவியாக இருந்த வேல்முருகன் தானாம். அவர் சொன்ன அரவாணிகள் கதையையே இப்படத்துக்கு ஓகே பண்ணியிருக்கிறார் கார்த்திகேயன்.
குறைந்த முதலீட்டில் இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான தொடக்க விழாவை தனது சொந்த ஊரான திருப்பூரில் மிக எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார் கார்த்திகேயன்.
வேல்முருகன் வேறுயாருமல்ல, இவர் ஏற்கனவே ரஞ்சித்தை வைத்து நேசம்புதுசு என்ற படத்தை இயக்கியுள்ளார்.