Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எல் ஆர் ஈஸ்வரியுடன் டி ராஜேந்தர் பாடிய குத்துப் பாட்டு!
காபரே, தெம்மாங்கு, தாலாட்டு, காதல் என அத்தனை விதமான பாடல்களிலும் வெளுத்துக் கட்டிய எல் ஆர் ஈஸ்வரியின் குரலுக்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமுண்டு.
எண்பதுகளுக்குப் பிறகு எல் ஆர் ஈஸ்வரி சினிமாவில் பாடுவது நின்றுபோனது. பக்திப் பாடல்களைப் பாடி வந்தார்.
இந்த நிலையில், எல் ஆர் ஈஸ்வர் மீண்டும் முழுமையான குத்துப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் அவருடன் சேர்ந்து பாடியிருப்பவர் சினிமாவின் அஷ்டாவதானி எனப்படும் டி ராஜேந்தர். அவரது மகன் சிலம்பரசன் நடிக்கும் ஒஸ்தி படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலைத்தான் இந்த இருவரும் இணைந்து பாடுகிறார்கள்.
'கலாசலா..' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாட்டுக்கு திரையில் ஆடப் போகிறவர் மல்லிகா ஷெராவத். அவருடன் ஹீரோ சிம்பு, வில்லன் சோனு சூட் ஆகியோரும் குத்தாட்டம் போடுகிறார்கள் இந்தப் பாடலுக்கு.
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தபாங் படத்தின் ரீமேக்தான் இந்த ஒஸ்தி. தபாங்கில் 'முன்னி பத்னம்' என்ற ஐட்டம் பாட்டு செம ஹிட். அந்தப் பாடலுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் தமன் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ள பாடல்தான் 'கலாசலா..'
மல்லிகா ஷெராவத், எல் ஆர் ஈஸ்வரி, டி ராஜேந்தர், சிம்பு என ஒரு வித்தியாசமான கூட்டணி இந்தப் பாடலுக்கு அமைந்துவிட்டதால், இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இத இத இதத்தானே 'ஒஸ்தி' டீம் எதிர்ப்பார்த்தது!