twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்தப் பட்டு!!

    By Sudha
    |

    Nayantara
    முறைப்படி விவாகரத்து கிடைக்கும் மாதமான ஜூன் வரை கூட பொறுக்க முடியவில்லை போலிருக்கிறது நயன்தாரா மற்றும் பிரபு தேவாவால்.

    இப்போதே முகூர்த்தத்துக்கு நாள் குறித்து, அதற்கான ஏற்பாடுகளில் முமும்முரமாகிவிட்டனர்.

    நயன்தாரா-பிரபுதேவா திருமணத்துக்கான தடை நீங்கியுள்ளது. விவாகரத்துக்கு மனைவி ரம்லத் சம்மதித்துவிட்டார். ஜூன் மாதம் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து வழங்கப்படுகிறது.

    இன்னொரு புறம் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. திருமணத்தை சென்னை நட்சத்திர ஓட்டலில் விமரிசையாக நடத்த பிரபுதேவா முடிவு செய்துள்ளார். ரம்லத்துடனான திருமணம் ரகசியமாக நடந்தது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தப் போகிறாராம்.

    திருமணத்துக்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள் நிறைய பேர் அழைக்கப்பட உள்ளனர்.

    நயன்தாராவுக்காக காஞ்சீபுரத்தில் முகூர்த்தப்பட்டுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். முழுக்க தங்கஜரிகையுடன் பல லட்சம் மதிப்பில் இதைச் செய்கிறது பிரபல ஜவுளி நிறுவனம்.

    திருமணத்துக்கு பிறகு சென்னையில் குடியேறுகிறார்கள். ஏற்கனவே இங்கு இருந்த வீட்டை ரம்லத்துக்கு கொடுத்து விட்டதால் புது வீடு பார்க்கின்றனர்.

    English summary
    Nayanthara and Prabhu Deva, the hot pair of Kollywood now gearing up for marriage. According to sources, Prabhu Deva ordered for a special muhurtha silk saree for Nayanthara in Kancheepuram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X