Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: குடும்ப கோர்ட் அதிரடி தீர்ப்பு
நடிகர் பிரஷாந்த்துக்கும், சென்னையைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் இடையே திருமணம் நடந்தது. இருவருக்கும் குழந்தையும் பிறந்தது.
குழந்தை பெற தாய் வீட்டுக்குச் சென்ற கிரகலட்சுமி பிரஷாந்த் வீட்டுக்குத் திரும்ப மறுத்ததால் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த்.
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி அவர் மனு செய்தார். இதுதொடர்பா விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக, தனது மனைவிக்கு ஏற்கனவே வேணு பிரசாத் என்பவருடன் திருமணம் நடந்து விட்டதாகவும், அதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் கூறி புதிய மனுவைத் தாக்கல் செய்தார் பிரஷாந்த்.
முதல் திருமணத்தை மறைத்ததோடு, அவரை விவாகரத்து செய்யாமலும் உள்ளார் கிரகலட்சுமி. எனவே எனக்கும், அவருக்கும் இடையே நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும், கிரகலட்சுமியிடம் உள்ள குழந்தையை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் பிரஷாந்த்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி அளித்த தீர்ப்பில்...
வேணு பிரசாத்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை மறைத்து பிரஷாந்த்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது. திருமணமே செல்லாது என்று ஆகி விட்டதால் குழந்தைக்கு பிரஷாந்த் உரிமை கோர முடியாது. குழந்தை கிரகலட்சுமியிடமே வசிக்கும்.
திருமணம் செல்லாது என்று ஆகி விட்டதால் கிரகலட்சுமியின் விவாகரத்து கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கோரி வேணு பிரசாத் தாக்கல் செய்த மனு இன்னும் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.