Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'ராசியாகி விட்ட' ரஜினி - ரஹ்மான்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன், சுல்தான் தி வாரியர் இரண்டு படங்களுக்கும் ஏ ஆர் ரஹ்மான்தான் இசையமைப்பாளர். ஆனாலும் அவர் மீது ரஜினிக்கு ஒரு வருத்தம் உண்டு. மகள் சௌந்தர்யா ரஜினி தயாரித்து இயக்கும் சுல்தான் படத்துக்கு இன்னும் முழுமையான இசையைத் தரவில்லையே என்பதுதான் அது.
படத்தில் மொத்தம் 5 பாடல்கள். அவற்றில் இரண்டு மட்டும்தான் தயாராகியுள்ளதாம். மற்ற பாடல்களுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை.
இடையில் சுல்தான் படப்பிடிப்பும் நின்று போயிருந்ததால் ரஜினியும் கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் சுல்தான் படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. இதில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். ஒரு ரஜினி படத்துக்கான அத்தனை அம்சங்களும் குறைவின்றி சேர்க்கப்பட்டுள்ளனவாம் படத்தில்.
எனவே படத்துக்கு ஒரு அறிமுகப் பாடல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை ரஹ்மானிடம் தெரிவிக்க, இந்த முறை தானே நேரில் போக முடிவு செய்த ரஜினி, மகள் சௌந்தர்யாவை அழைத்துக் கொண்டு நேரே ரஹ்மான் வீட்டுக்குப் போனார்.
அவரிடம் சில நிமிடங்கள் ரஜினி மனம் விட்டுப் பேச, ரஹ்மானும் உடனே இசையை முடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டாராம். அந்த அறிமுகப் பாடலையும் அட்டகாசமாக போட்டுத் தருவதாக அவர் கூற, தடங்கல் நீங்கிய சந்தோஷத்துடன் வீடு திரும்பியுள்ளார் ரஜினி.