twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுப்பிரமணியபுரம்- ஒரு ஃபிளாஷ்பேக்

    By Staff
    |

    Subramaniapuram movie still
    காதுகளை மறைக்கும் ஹிப்பி கிராப், தரையைப் பெருக்கும் பெல்பாட்டம், இரண்டு வார தாடி மண்டிய முகம், கண்களில் எப்போதும் ஒரு மிதப்பு... இதைப் படிக்கும் பலருக்கும், ஒருதலை ராகம் படமும், எண்பதுகளில் தாங்கள் அனுபவித்த இளமைக் காலங்களும் நினைவுக்கு வந்து சிலிர்க்கச் செய்துவிட்டுப் போகும்.

    அந்த சிலிர்ப்பை மீண்டும் ஒரு முறை அன்றைய இளைஞர்களுக்குத் தரும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ள படம் சுப்பிரமணியபுரம். இநதப் படம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்தே, படத்தைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் ஆரோக்கியமாகவே இருப்பதால், படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    படத்தின் இயக்குநர் சசிகுமார் எண்பதுகளில் தன் இளமையை அனுபவித்தவர். பாலாவின் உதவியாளர் என்பது கூடுதல் தகுதி.

    அந்த நாட்களின் இனிமையை அப்படியே திரும்பத் திரையில் காட்ட வேண்டும், இன்றைய இளைஞர்களுக்கும் உணர்த்த வேண்டும். வெறுமனே அந்த காலத்தைப் படம் பிடித்தால் மட்டும் போதாது. எண்பதுகளில் காதலுக்கு இருந்த வலிமை என்ன, நட்புக்கு இருந்த மரியாதை என்ன என்பதையும் புரிய வைப்பதே என் லட்சியம், என்கிறார் சசிகுமார்.

    சென்னை-28 புகழ் ஜெய், புதுமுகம் மாரி, கஞ்சா கருப்பு நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகி புதுமுகம் ஸ்வாதி. இயக்குநர் சமுத்திரக்கனி முதல் முறையாக வில்லன் வேடம் போட்டிருக்கிறார் இப்படத்தில்.

    ஜூலை 4-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது சுப்பிரமணியாபுரம்.

    ஒரு இனிய பிளாஷ்பேக்குக்கு தயாராகுங்க...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X