Don't Miss!
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எம்ஜிஆருக்கு சென்னையிலும் கோயில்!
புரட்சித் தலைவர் என்றும் பொன்மனச் செம்மல் என்றும் மக்களால் அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரியவர்.
இவருக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்கெனவே கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பலரும் இந்தக் கோயில்களில் அன்னதானம் செய்து வருகின்றனர். வழிபாடும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன் மதுரைக்கு அருகிலும் சேலம் அருகிலும் எம்ஜிஆருக்கு கோயில்கள் கட்டப்பட்டன.
இப்போது, சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியிலும் எம்ஜிஆருக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள நாதமேட்டில் இந்த கோயில் கட்டப்படுகிறது.
எம்ஜிஆரால் நிறுவப்பட்ட அதிமுக உள்பட, எந்த அரசியல் கட்சியின் உதவி்யுமில்லாமல் இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது.
கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர்.
இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இலவச உதவிகளும் தரப்பட்டது.
ஏராளமான எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.