Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சினிமா ஸ்டைல்-தொகுதியை பெற்ற விஜய்சாந்தி!
ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் கேட்கும் கட்சி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி. இதே கோரிக்கைகளுடன் நடிகை விஜய்சாந்தியும் சமீபத்தில் 'தல்லி தெலுங்கானா' என்ற கட்சியைத் துவங்கினார்.
இணைந்து போராடினால் கோரிக்கை எளிதில் நிறைவேறும் என்று சந்திரசேகர ராவ் விடுத்த அழைப்பை ஏற்று தன் கட்சியை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் இணைத்தார் விஜய்சாந்தி.
அவருக்கு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மகளிர் அணி தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட விஜய்சாந்தி விரும்பினார்.
ஆனால், அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முன்பே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். அதனால், ஆத்திரம் அடைந்த விஜய்சாந்தியின் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். வேறு வழியின்றி சந்திரசேகர ராவ் பின்வாங்கி விட்டார். தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்ட அவர், மேடக் தொகுதியில் விஜய்சாந்தி போட்டியிடுவார் என்று நேற்று அறிவித்தார்.
அந்த தொகுதியில் ஏப்ரல் 16-ந் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. எனவே, விரைவில் விஜய்சாந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அதே நேரத்தில் மேடக் தொகுதிக்கு பதிலாக, மெகபூப் நகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.