கோலிவுட் - 2008

By Staff

முந்தைய பக்கம்

காமெடி Vs அதிரடி:

தமிழ்த் திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பரபரப்பில் ஆழ்த்திய சம்பவம் நடிகர் வடிவேலுவின் சென்னை வீடு மற்றும் அலுவலகம் மீதான தாக்குதல்.

விஜயகாந்த்துக்கும், அவருக்கும் முன்பே சிறு சிறு பிரச்சினைகள் இருந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 11ம் தேதி வடிவேலுவின் சாலிகிராமம் வீட்டிலும், அலுவலகத்திலும் ஒரு கும்பல் கல்வீசித் தாக்கி ரகளையில் இறங்கியது.

இந்த சம்பவத்தால் வடிவேலு கொதிப்படைந்தார். விஜயகாந்த் ஏவி விட்ட கும்பல்தான் தன்னை வந்து தாக்கியது என்று ஆவேசமாக பேட்டி அளித்தார்.

விஜயகாந்த்துக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து மோதட்டும். அடுத்த தேர்தலில் விஜயகாந்த் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் முதல்வர் கருணாநிதிதான். அவர் தூண்டி விட்டுத்தான் வடிவேலு பேசுகிறார் என்று விஜயகாந்த் மறுப்பு தெரிவித்தார்.

விஜயகாந்த் - வடிவேலு இடையிலான பூசலின் உச்சகட்டமாக இந்த அதிரடி, ஆக்ஷன், அட்டாக் நிகழ்ச்சி நடந்தது.

சர்ச்சைகள்..:

- சென்னையில் ஜனவரி 11ம் தேதி நடந்த சிவாஜி பட விழாவில் நடிகை ஷ்ரியா குட்டைப் பாவாடையும், அரை குறை மேலாடையும் அணிந்து வந்து முதல்வர் கருணாநிதி இருந்த மேடையில் அமர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஷ்ரியாவின் இந்த குறைச்சலான ஆடை அலங்காரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் தான் அப்படி வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் ஷ்ரியா.

- வல்லமை தாராயோ பட விழாவின்போது அம்மன் சிலைகளுக்கு அருகில் செருப்புக் காலுடன் இருந்ததாக குஷ்பு மீது சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக வழக்குகளும் போடப்பட்டன.

- இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், ராஜீவ் காந்தி படுகொலையை ஆதரித்தும் பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

- கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் எழுத்தாளர் சுஜாதாவின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை சேலம் போலீஸார் கைது செய்து ஜீ்ப்பி்ல் இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

- நடிகை ஷோபனா எனது கணவரை அபகரித்துக் கொண்டார். எனது கணவரை ஷோபனா விடாவிட்டால் அவரது வீடடு முன்பு குழந்தைகளுடன் மறியல் போராட்டம் செய்வேன் என்று டெல்லியைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

- நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொண்டு விட்டு ஏமாற்றியதாக ஸ்டெபி என்ற பெண் புகார் கூறினார்.

- ராமன் தேடிய சீதை படம் தொடர்பான நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களைப் பார்த்து 'பாடு' என்று மெட்ராஸ் தமிழில் திட்டி செய்தியாளர்களின் கோபத்திற்கு ஆளானார் இயக்குநர் சேரன்.

- போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக கைது செய்யப்பட்டார் நடிகை புளோரா.

நமீதாவுக்குப் புதுப் பெருமை...:

கவர்ச்சி திலகமாக கோலிவுட்டை குளிர்வித்து வரும் நமீதாவுக்கு 2008ம் ஆண்டு புதுப் பெருமை கிடைத்தது. கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்களில் இந்தியாவிலேயே 3வது இடம் நமீதாவுக்குக் கிடைத்தது.

அதேசமயம், தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களில் நமீதாவுக்கே முதலிடம்.

சின்னத் திரைக்குப் போன திரையுலகம்...:

இந்த ஆண்டும் சின்னத் திரைக்கு நிறைய திரையுலகினர் இடம் பெயர்ந்தனர்.

பாரதிராஜா, முதல் முறையாக சின்னத் திரைக்காக ஒரு சீரியலை இயக்கத் தொடங்கினார். தெக்கித்தி பொண்ணு என்ற அந்த சீரியலில் நெப்போலியன்தான் நாயகன். அவருக்கும் இதுதான் முதல் டிவி அறிமுகம். ஆனால் தற்போது நெப்போலியன் அதிலிருந்து விலகி விட்டார்.

நடிகை சோனியா அகர்வால், குஷ்புவின் தயாரிப்பில் கலைஞர் டிவியில் நாணல் என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதேபோல பெரிய திரையைக் கலக்கிய முன்னாள் நாயகி சிம்ரனும், இந்த ஆண்டு ஜெயா டிவியில் ஒளிபரப்பான சிம்ரன் திரை மூலமும், அதற்கு முன்பாக சன் டிவியில் ஒளிபரப்பான கேம் ஷோ மூலமும் டிவிக்கு வந்தார்.

முன்னாள் நாயகியான சங்கவியும் டிவிக்கு வந்து விட்டார். அவரது நடிப்பில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X