Don't Miss!
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- News ‛‛கடவுளே நான் ஜெயிக்கணும்’’.. ஓட்டுப்போட சென்றதும் இவிஎம் முன்பு தமிழிசை செய்ததை கவனீச்சிங்களா!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெங்களூரில் விஷ்ணுவர்தனுக்கு நினைவு இல்லம்!
தனது 200 வது படமான ஆப்தரக்ஷகாவில் நடித்துக் கொண்டிருந்த விஷ்ணுவர்தன், கடந்த டிசம்பர் 30-ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
விஷ்ணுவர்த்தனின் உடல், பெங்களூர் அபிமான் ஸ்டூடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு கோவில் வடிவத்தில் நினைவு இல்லம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஷ்ணுவர்தன் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். அவரது மரணத்துக்குப் பின் வெளியான ஆப்தரக்ஷகாவுக்கு பெரும் வெற்றியைத் தந்தனர் ரசிகர்கள். எனவே ஆப்தரட்சகா படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிருஷ்ணா பிரஜ்வெல், இந்த நினைவுச் சின்னத்துக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
விஷ்ணுவர்த்தனின் மனைவி பாரதியிடம் இதற்கான அனுமதியையும் அவர் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விஷ்ணுவின் சமாதி அருகே இந்த கோவில் அமைக்கப்படும். அந்த கோவிலுக்குள் விஷ்ணுவர்த்தனின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும்.
மார்பளவு சிலை அமைக்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் பாரதி விஷ்ணுவர்த்தனின் யோசனையின்பேரில், மார்பளவு சிலைக்கு பதிலாக முழு உருவ சிலை அமைக்கும்படி யோசனை தெரிவித்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்கும் விஷ்ணுவர்தனின் முதலாம் நினைவஞ்சலியின்போது கோயில் வேலையும் சிலையை நிறுவுவதும் முடிந்துவிடும்.." என்கிறார்.
கோயில் வேலைகள் இப்போதே நடைபெறத் துவங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.