வேலூர் மாவட்டம் பூர்ணா!
இன்னும் ஒரு காவல்துறைக் கதைதான் வேலூர் மாவட்டம். அதேசமயம், காவல்துறையை தூக்கிப் பிடிக்கும் வகையிலான கதையுடன் கூடியதாக இந்தப் படம் அமைந்துள்ளதாம்.
மாசிலாமணி படத்தை இயக்கிய ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் நந்தா. அவருடன் டூயட் பாடி ஆடும் கேரக்டரில் தலை காட்டியுள்ளார் பூர்ணா. கைவசம் பெரிய அளவில் படம் இல்லாமல் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் பூர்ணா இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளாராம்.
காமெடிக்கு சந்தானம், குணச்சித்திர வேடத்துக்கு ஸ்ரீமன் என படத்தில் முக்கியக் கலைஞர்கள் நிரம்பியுள்ளனர்.
காவல்துறை அதிகாரியாக வருகிறாராம் நந்தா. காவல்துறை அதிகாரி வேடங்களில் நடித்த பல ஹீரோக்களுக்கு அது பெரும் உயர்வைக் கொடுத்துள்ளது. அதே போல இந்தப் படமும், நந்தாவுக்கு பெரிய பிரேக் தரும் என்கிறார் இயக்குநர் மனோகர்.
படம் சிறப்பாக வர வேண்டும், கதையில் சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக சில காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று அதன்படி திரைக்கதையை வடிவமைத்துள்ளாராம் மனோகர்.


Click it and Unblock the Notifications











