Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரசிகர்கள் தொந்தரவால் தேர்வு எழுத முடியாமல் வெளியேறிய சௌந்தர்யா!
ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்குச் சௌந்தர்யா சென்றார்.
அவர் தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். சௌந்தர்யாவைப் பார்க்க அனைவரும் முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து விடுபட்டு தேர்வுக் கூடத்துக்கு சென்றார்.
அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும், தங்களது வேலையை விட்டுவிட்டு சௌந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஜன்னல் மற்றும் வாயிலில் நின்று பெரும் கூட்டம் அவரை வேடிக்கைப் பார்த்தது. இதனால் சௌந்தர்யா பெரும் சங்கடமடைந்தார். அவரால் தேர்வு எழுத முடியவில்லை.
எனவே அவர் கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் கல்லூரி முதல்வர் மறுத்தார்.
பிரபலங்கள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்படுவது ஏற்கெனவே உள்ள வழக்கம்தான் என்பதை உதாரணங்களுடன் சுட்டிக் காட்டி முதல்வரிடம் வாதாடினார் சௌந்தர்யா.
ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார் சௌந்தர்யா!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!