Don't Miss!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஹீரோவாகும் வடிவேலு மகன் சுப்பிரமணி!
வடிவேலுவின் மூத்த மகன் பெயர் சுப்பிரமணி. 23 வயது இளைஞர். பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன் துறையில் சில கோர்ஸ்கள் படித்துவந்தார்.
இவரை நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்தார்கள். சிலர் வடிவேலுவின் கால்ஷீட்டை சீக்கிரம் பெறுவதற்கான குறுக்கு வழியாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதையெல்லாம் புரிந்து கொண்ட வடிவேலு முதலில் சம்மதிக்கவில்லை. "நேரம் வரட்டும்...அப்புறம் பார்க்கலாம்ணே'' என்றே கூறிவந்தார்.
இப்போது சரியான வாய்ப்பு வந்திருப்பதால் தன் மகன் சுப்பிரமணியை கதாநாயகனாக அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார் வடிவேலு.
நல்ல கதையாக அமைய வேண்டும் என்பதற்காக, தானே பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் வடிவேலு.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என் மகன் சுப்பிரமணியை நடிக்கச் சொல்லி நிறைய பேர் கேட்டார்கள்.
ஆனால் அவசரப்பட்டு அவனை இறக்கிவிட்டு, காமெடியாகிவிடக் கூடாது என்பதால் பொறுமாயாக காத்திருந்தேன்.
சமீபத்தில் நான் கேட்ட ஒரு கதை சுப்பிரமணிக்குப் பொறுத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
என்னைப்போல் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆகிறான்.
அவனை, தமிழக மக்களிடம் நான் ஒப்படைக்கிறேன். என் பிள்ளையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் இப்போது, பிஸியாக முன்னால் ஓடிக்க்கிட்டிருக்கிறேன். அவன் என் பின்னால் ஓடி வந்து, என்னை துரத்தி பிடிக்கட்டும். அல்லது எனக்கு முன்னே கூட ஓடட்டும்.
அவன் படத்தில் காமெடி நான் காமெடி செய்யும் நிலை வந்தால் சந்தோஷப்படுவேன்.
என் மார்க்கெட் நன்றாக இருக்கும்போதே சுப்பிரமணியை தமிழக மக்களிடம் ஒப்படைக்கிறேன். இனி அவங்க பார்த்துக்குவாங்க..." என்றார்.