Don't Miss!
- News பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உங்களுக்கு 32 முறையா, எனக்கு 50 முறை. கணக்கை அதிகரிக்கிறேன்... கமலிடம் சொன்ன ஜாக்கி சான்
சென்னை: உலக அளவில் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் நடிகர் என்றால் அது ஜாக்கி சான் அவர்கள்தான்.
காரணம் சண்டைக் காட்சிகளில் கைதேர்ந்த அவர் அதனை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் வல்லவர். அதனால் குழந்தைகளாக இருக்கும்போதே அனைவரது மனதிலும் பதிந்து விடுவார்.
ஒருமுறை நம்முடைய கமல்ஹாசன் அவர்களும் ஜாக்கிசான் அவர்களும் சந்தித்துக் கொண்டபோது அவர்கள் பேசிக் கொண்டதை கமல்ஹாசன் ஒரு நிகழ்வில் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டின் பெஸ்ட் முதல் நாள் வசூல் படங்களின் பட்டியல்.. ரஜினி, கமல், அஜித், விஜய் யார் படம் டாப்?
தசாவதாரம்
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தசாவதாரம். ரவிச்சந்திரன் ஆரம்ப காலக்கட்டத்தில் ஜாக்கிசான் படங்களை தமிழில் டப் செய்து அதை தமிழகத்தில் விநியோகித்தவர். அந்த வகையில் ஜாக்கி சான் வட்டாரத்தில் இருப்பவர்களுடன் ரவிச்சந்திரன் நட்பு பாராட்டியவர். எனவே மிகப் பெரிய பொருட்செலவில் உருவான தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரை கலந்து கொள்ளச் செய்தார்.
ஜாக்கி சான் எளிமை
அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது நாம் இருவரும் சேர்ந்து நடிக்கலாம் என்று கமல்ஹாசனிடம் ஜாக்கி சான் கூறியிருப்பார். மேடைக்காக அவர் அப்படி கூறியிருந்தாலும் இருவரும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என்று ரசிகர்கள் இன்னமும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அந்த மேடையில் இசை வெளியிடப்பட்ட போது அந்த போஸ்டர் கவரை அனைவரும் கிழித்து கீழே எறிந்தார்கள். பின்னர் அந்த போஸ்டரை ஓரமாக கமல்ஹாசன் வைக்கச் செல்ல, அமிதாப்பச்சன், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களும் மேடையில் நின்று கொண்டிருக்க ஜாக்கிசான் கீழே விழுந்த போஸ்டரை எடுத்துக்கொண்டு ஓரமாக வைக்கச் சென்றார். அதனை கவனித்த ரசிகர்களும் அங்கிருந்தவர்களும் ஜாக்கிசானின் எளிமையை கண்டு வியந்தனர்.
ஜாக்கி கமல் உரையாடல்
அந்த சமயத்தில் இருவரும் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தபோது இதுவரை உங்களுக்கு எத்தனை முறை ஃபிராக்சர் ஆகியுள்ளது என்று கமல்ஹாசன் கேட்க, நீங்கள் சண்டை போடுவீர்களா என்று ஜாக்கிசான் கேட்டாராம். நானும் என்னுடைய படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்று சொல்ல இதுவரை உங்களுக்கு எத்தனை முறை ஃபிராக்சர் ஆகியிருக்கிறது என்று ஜாக்கி 32 முறை என்று கமல் சொல்ல சிறிது நேரம் யோசித்த ஜாக்கிசான் எனக்கு வெறும் 50 முறைதான் ஆகியுள்ளது. கூடிய விரைவில் கணக்கை அதிகரிக்க வேண்டும் என்று நகைச்சுவையாக சொன்னதாக கமல் சமீபத்திய நிகழ்வில் கூறியுள்ளார்.
இந்தியச் சந்தை
இந்தியாவைச் சேர்ந்த மல்லிகா ஷெராவத்துடன் நடித்துள்ள ஜாக்கி சான் விரைவில் இந்திய நடிகர்களுடனும் நடிக்க வேண்டும் அதுவும் அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் தமிழ் நாட்டு நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பது இங்குள்ள ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.