Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒரே நாளில் ஹீரோவான 'ஈ'!!
இந்தப் படம் மூலம் தென் இந்தியாவின் ஷோமேன் என்ற புதிய அந்தஸ்தைப் பிடித்துள்ளார் ராஜமவுலி.
ஹீரோ இறந்து ஈயாக மாறி எதிரிகளைப் பழிவாங்கும் ஒரு சாதாரண கதையை, மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு பிரமாண்டமாகவும், தொழில்நுட்ப நேர்த்தி குறையாமலும் தந்த ராஜமவுலிக்கு பாராட்டுக்களும் வசூலும் குவிகின்றன (மனிதர் இத்தனை வெற்றி கொடுத்தும் சாதாரண ஐ டென் காரில்தான் போகிறாராம்!)
தெலுங்கில் இந்தப் படம் ரூ 34 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அங்கே கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்தால், இந்தப் படம் விற்பனைத் தொகையை இரண்டு மடங்காக திருப்பித் தந்துவிடும் நிலை உள்ளது.
தமிழில் நேரடிப் படமாகவே வெளியாகியுள்ளது. போட்டிக்கு வேறு படங்களும் இல்லை. சோலோ ரிலீஸ். பல அரங்குகளில் சகுனியையும் ஸ்பைடர்மேனையும் கூட தூக்கிவிட்டு நான் ஈயை வெளியிட்டுள்ளனர்.
படம் வெளியான வெள்ளிக்கிழமை தமிழகத்தின் அத்தனை அரங்குகளிலும் 99 சதவீத பார்வையாளர்கள் கூட்டம். சிறுவர்கள் ஆர்வம் காட்டுவதால், இனி குடும்பம் குடும்பமாக வர வாய்ப்பிருப்பதால், நான் ஈயை வாங்கியவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!
ஆக, ஒரேநாளில் ஹீரோவாகிவிட்டது ஈ!