twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரஞ்சீவி மகனை இயக்கப் போகிறார் முருகதாஸ்

    By Sudha
    |

    சிரஞ்சீவியை வைத்து தாகூர் என்ற ஹிட் படத்தைக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அவரது மகன் ராம் சரண் தேஜாவை இயக்கப் போகிறார்.

    தமிழில் மாபெரும் ஹிட் ஆன படம் விஜயகாந்த் நடித்த ரமணா. அரசியலில் நுழைய நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு இநத்ப் படம் பெரும் பிரேக் கொடுத்தது.

    பின்னர் இந்தப் படத்தை சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் இயக்கினார் முருகதாஸ். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. சிரஞ்சீவிக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

    இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கப் போகிறார் முருகதாஸ்.

    தமிழில் சமீபத்தில்தான் முருகதாஸின் 7ஆம் அறிவு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் செய்யவுள்ளார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்து விட்டு ராம் சரண் தேஜா படத்திற்குப் போகிறார் முருகதாஸ்.

    English summary
    Director A R Murugadoss will direct Ram Charan Teja for a Telugu movie soon. He will go to this Telugu flick after finishing a Tamil movie with VIjay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X