சென்னையில் பாலச்சந்தரை சந்தித்த ஆமீர்கான்!
சென்னை: சென்னை திரைப்பட விழாவுக்கு வந்த பாலிவுட் நடிகர் ஆமீர்கான், இயக்குநர் பாலச்சந்தரை அவரது வீட்டில் சந்தித்தார்.
சென்னையில் நடக்கும் 11வது சர்வதேச திரைப்பட விழாவை, கமல்ஹாஸனுடன் இணைந்து துவக்கி வைக்க வந்திருந்தார் நடிகர் ஆமீர்கான். நேற்றைய துவக்க விழாவுக்குப் பிறகு, இயக்குநர் கே பாலச்சந்தரை சந்திக்க விரும்பினார் ஆமீர்.

இன்றுகாலை இயக்குநர் பாலச்சந்தரை அவரது மயிலாப்பூர் இல்லத்தில் சந்தித்தார் அமீர்கான்.
ஆமீர் கானை வரவேற்று உபசரித்த பாலச்சந்தர், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆமீர் கானின் படங்கள் மற்றும் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்.

பாலச்சந்தர் போன்ற சாதனையாளர்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆமீர்கான் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











