Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனது படங்கள் குறித்து ஒபாமாவுக்குத் தெரிந்திருக்கிறது-ஆமிர் பெருமிதம்
ஒபாமா தம்பதிக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளித்துக் கெளரவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு பிரபலங்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நடிகர் ஆமிர்கான்.
விருந்துக்குப் போன ஆமிர்கானுக்கு, ஒபாமா மூலம் பெரும் சந்தோஷம் கிடைத்ததாம். அதாவது ஒபாமா தம்பதியினர் ஆமிர்கானையும், அவரது படங்களையும் பாராட்டினார்களாம். இதனால் புளகாங்கிதமடைந்துள்ளார் ஆமிர்கான்.
இதுகுறித்து ஆமிர் கூறுகையில், எனது படங்கள் குறித்தும், எனது பணிகள் குறித்தும் ஒபாமாவுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இந்த விருந்தின் மூலம் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டபல்வேறு பெரும் தலைவர்களை சந்திக்க முடிந்தது. நான் மன்மோகன் சிங்கின் பெரிய ரசிகன். அவர் என்னை விருந்துக்கு அழைத்ததை பெரும் கெளரவமாக கருதுகிறேன் என்றார் ஆமிர்.
தொடர்ந்து அவர் கூறுகையில், விருந்தின்போது அதிபரின் மனைவி மிஷல் என்னிடம் வந்து, உங்களது ரங் தே பசந்தி படப் பாடலுக்காக தான் மும்பையில் நடனமாடியதாக சிரித்தபடி கூறியபோது மெய் சிலிர்த்துப் போனேன் என்றார் ஆமிர்கான்.
பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், அவரது மனைவியும், நடிகையுமான ஷபானா ஆஸ்மி ஆகியோரும் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
சூப்பர் ஸ்டார்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்றோரையும் கூட காங்கிரஸ் அரசு விருந்துக்கு அழைத்திருக்கலாமே...!