ஆணிவேர் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளின் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப்படம்உருவாகியுள்ளது. ஆணிவேர் என்ற இந்தப் படம் போரின் மத்தியில் மலரும் ஒரு அழகிய காதலையும்போரின் அவலங்களையும் சொல்கிறது.இது காதல் கதை என்றாலும் கூட இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல், போர்சூழலை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.இந்தியப் பெருங்கடலின் முத்து என்று புகழப்பட்ட இலங்கை இன்று பிரச்சினைகளின்மகா சமுத்திரமாக மாறிப் போயுள்ளது. அதை எதார்த்தமாய் சொல்லும் முயற்சியாம்இது.தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் (மதுமிதா) வன்னியில்உள்ள ஓமந்தை நகருக்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.தனது பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க இந்த பெண் நிருபர் இலங்கைக்கு வருகிறார்.இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கி அதன் அழகையும், எழிலையும் படம்பிடிக்கிறார்.அப்போது தமிழ் டாக்டர் (நந்தா) ஒருவருடன் அவருக்கு காதல் மலர்கிறது. அவர்வெறும் டாக்டர் மட்டுமல்ல சமூக சேவகரும் கூட. போரினால் பாதிக்கப்பட்டதமிழர்களுக்கு அவர் சேவை செய்து கொண்டிக்கிறார்.அந்த நிருபர் இலங்கையில் தங்கியிருக்கும்போது போர் தீவிரமாகிறது. அப்போதுதமிழர்கள் படும் அவலங்கள் குறித்து செய்தி திரட்டியபடி கனத்த இதயத்துடன்தாயகம் திரும்புகிறார் அந்தப் பெண் நிருபர்.இந் நிலையில் தனது காதலரை சந்திக்க மீண்டும் இலங்கைக்கு வருகிறார். ஆனால்,அவரால் டாக்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்றுதெரியாமல் தவிக்கிறார். அவரை சந்திக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.அப்போது அவர் நேரில் பார்க்கும் தாக்குதல்கள், வன்முறைகள் தான் படத்தின் கரு.மனதை கனமாக்கி, கண்களை குளமாக்கும் காட்சிகள் ஏகப்பட்டவை எதார்த்தமாய்காட்டப்பட்டுள்ளனவாம்.பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாகும் காட்சிகள்,யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அகதிகளாக வரும் வழியில் தமிழர்கள்படும்பாடு ஆகியவற்றை பெண் நிருபரின் கண்கள் மூலமாக படம் பார்ப்பவர்கள்உணரும் வகையில் காட்சியமைப்பை செய்திருக்கிறார்கள்.ஈழத்தில் படமாக்கப்பட்ட முழு முதல் தமிழ்ப் படம் என்பது ஆணிவேரின் முக்கியஅம்சம்.படத்தை ஜான் எழுதி, இயக்க கேமராவை சஞ்சய் கையாண்டிருக்கிறார்.
ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளின் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப்படம்உருவாகியுள்ளது.
ஆணிவேர் என்ற இந்தப் படம் போரின் மத்தியில் மலரும் ஒரு அழகிய காதலையும்போரின் அவலங்களையும் சொல்கிறது.இது காதல் கதை என்றாலும் கூட இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல், போர்சூழலை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்தியப் பெருங்கடலின் முத்து என்று புகழப்பட்ட இலங்கை இன்று பிரச்சினைகளின்மகா சமுத்திரமாக மாறிப் போயுள்ளது. அதை எதார்த்தமாய் சொல்லும் முயற்சியாம்இது.
தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் (மதுமிதா) வன்னியில்உள்ள ஓமந்தை நகருக்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.
தனது பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க இந்த பெண் நிருபர் இலங்கைக்கு வருகிறார்.இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கி அதன் அழகையும், எழிலையும் படம்பிடிக்கிறார்.அப்போது தமிழ் டாக்டர் (நந்தா) ஒருவருடன் அவருக்கு காதல் மலர்கிறது. அவர்வெறும் டாக்டர் மட்டுமல்ல சமூக சேவகரும் கூட. போரினால் பாதிக்கப்பட்டதமிழர்களுக்கு அவர் சேவை செய்து கொண்டிக்கிறார்.
அந்த நிருபர் இலங்கையில் தங்கியிருக்கும்போது போர் தீவிரமாகிறது. அப்போதுதமிழர்கள் படும் அவலங்கள் குறித்து செய்தி திரட்டியபடி கனத்த இதயத்துடன்தாயகம் திரும்புகிறார் அந்தப் பெண் நிருபர்.
இந் நிலையில் தனது காதலரை சந்திக்க மீண்டும் இலங்கைக்கு வருகிறார். ஆனால்,அவரால் டாக்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்றுதெரியாமல் தவிக்கிறார். அவரை சந்திக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.
அப்போது அவர் நேரில் பார்க்கும் தாக்குதல்கள், வன்முறைகள் தான் படத்தின் கரு.
மனதை கனமாக்கி, கண்களை குளமாக்கும் காட்சிகள் ஏகப்பட்டவை எதார்த்தமாய்காட்டப்பட்டுள்ளனவாம்.
பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாகும் காட்சிகள்,யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அகதிகளாக வரும் வழியில் தமிழர்கள்படும்பாடு ஆகியவற்றை பெண் நிருபரின் கண்கள் மூலமாக படம் பார்ப்பவர்கள்உணரும் வகையில் காட்சியமைப்பை செய்திருக்கிறார்கள்.
ஈழத்தில் படமாக்கப்பட்ட முழு முதல் தமிழ்ப் படம் என்பது ஆணிவேரின் முக்கியஅம்சம்.
படத்தை ஜான் எழுதி, இயக்க கேமராவை சஞ்சய் கையாண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications