ஸ்பெஷல்ஸ்

By Staff
  • கையில் ஏதும் படங்கள் இல்லாததால் அபிராமி நொந்து நூடுல்சாகி இருக்கிறார். அழகும் திறமையும் இருந்தும் கூட சரியானமானேஜர் அல்லது பி.ஆர்.ஓ. சிக்காததால் தான் அவரால் சான்களைப் பெற முடியவில்லை என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.
  • சூர்யாவை வைத்து நந்தா மற்றும் மெளனம் பேசியதே படங்களைத் தயாரித்த அபராஜித் பிலிம்ஸ் அடுத்து விஜய்யை வைத்துமகாராஜன் இயக்கத்தில் ஒரு படம் எடுக்க உள்ளது. மெளனம் பேசியே நல்ல வெற்றியடைந்துவிட்டதால் மெகா பட்ஜெட்தயாரிப்பில் இறங்குகிறது இந்த நிறுவனம். தங்களது இந்த புதிய படத்தில் ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக்க முயன்றுவருகிறார்கள். கேட்ட பணம் கிடைக்கும் என்றாலும் விஜய்யுடன் இணைய ஐஸ்வர்யா ஒப்புக் கொள்வாரா என்பது தான் கேள்வி.
  • இதுவும் இன்னொரு நொந்த செய்தி தான். வெற்றிப் படங்கள் கொடுத்த பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் டைரக்டர் வஸந்தைப்பார்த்தால் நடிகர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க அஜீத், சூர்யா, விஜய் என அனைத்துமுன்னணி ஹீரோக்கள் வீட்டிலும் போய் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டார். ஆனால், இதுவரை யாரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் புதுமுகத்தைப் போட்டுவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறார் வஸந்த்.
  • கோடம்பாக்கத்தின் ஒரு மிக அழகிய ஜோடி சேர்ந்து நடிக்கப் போகிறது. அஜீத்தும் ஸ்னேகாவும் இணைந்து ஜனா படத்தில்நடிக்கப் போகிறார்கள்.
  • மாதவனை வைத்து சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ஜோதிகா. முதலில் தன் மனம் கவர்ந்த சூர்யாவை வைத்து படம் எடுக்கநினைத்தாராம். ஆனால், படம் ஏடாகூடமாகிவிட்டால் மனஸ்தாபம் வந்துவிட வாய்ப்பு உண்டு என்பதால் இருவருமே அதைத்தவிர்த்துவிட்டார்களாம். இருவரும் பேசியே மாதவனை முடிவு செய்தார்களாம்.
  • More from Filmibeat

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+
    X