Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அபிதாவின் மறுவாழ்வு அபிதகுஜலாம்பாள் மீண்டும் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க வருகிறார்.பேரு ரொம்பப் பழசா இருக்கே என்று சேது மாதிரி குழம்பாதீர்கள். இந்த குஜலாம்பாள், நம்ப சேது நாயகி அபிதாவேதான்.குட்டி இடைவேளைக்குப் பிறகு கோலிவுட்டில் படு பிசியான நடிகையாக மாறி வருகிறார் அபிதா.சேதுவில் நடித்த விக்ரம், இயக்கிய பாலாவும் எங்கேயோ போய் விட்டனர். அபிதாவும் எங்கேயோ போய் விட்டார், ஆனால்அவரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.அப்படி, இப்படி என்று அவருக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் மலையாளத்தில் எப்போதோ நடித்த பலான தேவதாசி படம்குறுக்கிட்டு அவரது பொழப்பில் மண்ணைப் போட்டு விட்டது.இதையடுத்து மலேசியாக்காரர் ஒருவருடன் கொஞ்சம் நெருக்கம், அவருடன் சுற்றியது என்று பெயர் கெட்டது.இப்போது அதையெல்லாம் தாண்டி மீண்டும் சுறுசுறுப்பாக வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்துள்ளார் அபிதா. அதன் விளைவாகசில படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார்.அதில் முதல் படமாக உணர்ச்சிகள் வெளியாகவுள்ளது. இதில் மிகவும் உணர்ச்சிகரமான கேரக்டராம் அபிதாவுக்கு. கிளாமருடன்கூடிய நடிப்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறாராம் அபிதா.இந்தப் படத்திற்குப் பிறகு சத்யராஜுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் அபிதா.இந்தக் கேரக்டர், சேதுவைப் போலவே ரொம்ப முக்கியமான கேரக்டராம். இந்தப் படத்திற்குப் பின், சேது போலவே மீண்டும் நான்பேசப்படுவேன் என்று தைரியமாகக் கூறுகிறார் அபிதா.சரி, சேதுவுக்குப் பிறகு ஏன் ஆளையே காணோம் என்று ஜெனிஷாவிடம் (அதாங்கோவ், அபிதாவின் ஒரிஜினல் கேரளப் பெயர்!)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா?) படித்துக் கொண்டிருந்தேன்.சேதுவுக்குப் பிறகு வெயிட்டான ரோல்கள் செய்யும் வாய்ப்புகள்தான் நிறைய வந்தன. ஆனால் படிப்பை முடிக்காமல் சினிமாவில்அதிகம் நடிக்க வேண்டாமே என்றுதான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. (அய்யோ, படிப்புல என்ன ஒரு அக்கறை)படித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் நிறைய ஹீரோயின்கள் வந்து விட்டார்கள். இருந்தாலும் எனக்கான ரோல்கள் எனக்குவரத்தான் செய்கின்றன. இப்போது கூட உணர்ச்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆகிய இரு படங்களிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள்.கலக்கியிருக்கிறேன் என்கிறார் அபிதா.நல்லா இருங்கோ..மாமி.. நல்லா இருங்கோ...
அபிதகுஜலாம்பாள் மீண்டும் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க வருகிறார்.
பேரு ரொம்பப் பழசா இருக்கே என்று சேது மாதிரி குழம்பாதீர்கள். இந்த குஜலாம்பாள், நம்ப சேது நாயகி அபிதாவேதான்.குட்டி இடைவேளைக்குப் பிறகு கோலிவுட்டில் படு பிசியான நடிகையாக மாறி வருகிறார் அபிதா.
சேதுவில் நடித்த விக்ரம், இயக்கிய பாலாவும் எங்கேயோ போய் விட்டனர். அபிதாவும் எங்கேயோ போய் விட்டார், ஆனால்அவரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.
அப்படி, இப்படி என்று அவருக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் மலையாளத்தில் எப்போதோ நடித்த பலான தேவதாசி படம்குறுக்கிட்டு அவரது பொழப்பில் மண்ணைப் போட்டு விட்டது.
இதையடுத்து மலேசியாக்காரர் ஒருவருடன் கொஞ்சம் நெருக்கம், அவருடன் சுற்றியது என்று பெயர் கெட்டது.
இப்போது அதையெல்லாம் தாண்டி மீண்டும் சுறுசுறுப்பாக வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்துள்ளார் அபிதா. அதன் விளைவாகசில படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார்.
அதில் முதல் படமாக உணர்ச்சிகள் வெளியாகவுள்ளது. இதில் மிகவும் உணர்ச்சிகரமான கேரக்டராம் அபிதாவுக்கு. கிளாமருடன்கூடிய நடிப்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறாராம் அபிதா.
இந்தப் படத்திற்குப் பிறகு சத்யராஜுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் அபிதா.இந்தக் கேரக்டர், சேதுவைப் போலவே ரொம்ப முக்கியமான கேரக்டராம். இந்தப் படத்திற்குப் பின், சேது போலவே மீண்டும் நான்பேசப்படுவேன் என்று தைரியமாகக் கூறுகிறார் அபிதா.
சரி, சேதுவுக்குப் பிறகு ஏன் ஆளையே காணோம் என்று ஜெனிஷாவிடம் (அதாங்கோவ், அபிதாவின் ஒரிஜினல் கேரளப் பெயர்!)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா?) படித்துக் கொண்டிருந்தேன்.
சேதுவுக்குப் பிறகு வெயிட்டான ரோல்கள் செய்யும் வாய்ப்புகள்தான் நிறைய வந்தன. ஆனால் படிப்பை முடிக்காமல் சினிமாவில்அதிகம் நடிக்க வேண்டாமே என்றுதான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. (அய்யோ, படிப்புல என்ன ஒரு அக்கறை)
படித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் நிறைய ஹீரோயின்கள் வந்து விட்டார்கள். இருந்தாலும் எனக்கான ரோல்கள் எனக்குவரத்தான் செய்கின்றன. இப்போது கூட உணர்ச்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆகிய இரு படங்களிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள்.கலக்கியிருக்கிறேன் என்கிறார் அபிதா.
நல்லா இருங்கோ..
மாமி.. நல்லா இருங்கோ...