Don't Miss!
- Automobiles இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மலேசிய மண்ணில் பர்த்டே பார்ட்டி நடத்திய மோனிகா
குழந்தை நட்சத்திரமாக பலபடங்களில் நடித்திருந்தாலும் தங்கர்பச்சனின் அழகி திரைப்படம் மோனிகாவை ஒரு பேரழகியாக தமிழ்த்திரையுலகிற்கு அடையாளம் காட்டியது. அதன் பின்னர் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க என்று வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். மலையாளப் படவுலகிலும் நன்கு அறியப்பட்ட கதாநாயகியாக 916 என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோனிகா.
நன்கு தமிழ் பேசி நடிக்கும் ஆற்றல் உடையவராகையால் உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். மலேசியாவிலேயே எடுக்கும் மலேசியத் தமிழ்ப் படத்தில் இவர் கதா நாயகியாக நடித்திருப்பதே இதற்குச் சான்று.
சமீபத்தில் மாயன் டிரீம் சிட்டியினை துவக்கி வைக்க மலேசியா சென்றிருந்தார் மோனிகா. அந்த நேரம் பார்த்து அவரது பிறந்த நாள் வந்து விட அதனைத் தெரிந்து கொண்ட அவரது மலேசிய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மோனிகாவைத் தங்களுடன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்த அவரும் சம்மதித்திருக்கிறார். அப்புறமென்ன! மோனிகாவின் பிறந்த நாளை அமர்க்களப்படுத்தி விட்டார்கள் மலேசியா ரசிகர்கள் மற்றும் நண்பர்கள்.
இது குறித்து மோனிகா கூறும் போது "மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதே பெரிய சந்தோஷம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அவர்கள் ஆவலாக இருந்தார்கள்... அவர்களது சந்தோஷத்திற்காக நானும் சம்மதித்தேன்... எனது பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடியதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி... இது என் வாழ் நாளில் முக்கியமான பிறந்த நாளாக மாறி விட்டது என்றால் மிகையல்ல..என்றார்.