Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அரசியல் வெறுத்துடுச்சு... சினிமாவில் கவனம் செலுத்துவேன்! - சொல்கிறார் ரோஜா
ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல படங்களில் நடித்த ரோஜா தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் பரபரப்பாக செயல்பட்டார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். கடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் தெலுங்கு தேசத்திலிருந்து தாவி, காங்கிரஸில் இணைந்தார். ஆனால் கண்டுகொள்ளப்படவில்லை.
இதனால் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். காவல்காரன் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலில் பல பிரச்சினைகளை சந்தித்தேன். பொதுமக்கள் நலனுக்காக கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையம் என்று சுற்றினேன். குறிப்பிட்ட நேரத்துக்கு சாப்பிட முடியவில்லை. உண்ணாவிரதம், தர்ணா போராட்டங்களிலும் பங்கு பெற்றேன்.
நான் எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் ஒன்றும் செய்யாதவர்களையே விரும்புகிறார்கள். அரசியலில் பெண்களை ஆண்கள் அடக்க பார்க்கிறார்கள். அங்கு பெண்களால் தாக்குபிடிக்க முடியாது. அரசியலை வெறுத்துவிட்டேன்.
சமூகசேவையில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். பதவி இருந்தால்தான் அதை செய்ய முடியும். எனவே திரும்பவும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அம்மா, அக்கா என எந்த வேடம் ஆனாலும் ஏற்பேன். விஜய் அம்மாவாக நடிப்பது மகிழ்ச்சி. திரையுலகில் நிறைய புதுப்புது கதாநாயகிகள் வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. மக்கள் ரசனை மாறுகிறது.
ஒரே உணவை தொடர்ந்து சாப்பிட்டால் பிடிக்காது. ஏற்கனவே பார்த்த கதாநாயகிகளையே திரும்ப திரும்ப பார்ப்பது இல்லை. புதுநாயகிகள் வந்தால்தான் பார்க்கிறார்கள். சினிமாவில் கிளாமர் மட்டுமே காட்டி ஜெயிக்க முடியாது. திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்..." என்றார் ரோஜா.
நெஞ்சினிலே படத்தில் 'தங்க இடுப்புக்கு தமிழ்நாட்டை எழுதித் தரட்டுமா..' என்று ரோஜாவுடன் விஜய் போட்ட குத்தாட்டம் நினைவிருக்கலாம்!
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்