twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன ஆச்சு?!?! கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு இது போதாத காலம் போலும்.பெரும்பாலான நடிகைகளுக்கு புதிதாக எந்தப் படம் வரவில்லையாம்.இதனால் டாப்பை மாற்றலாமா என்று டாப் ஸ்டார்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.நயனதாராவுக்கு கையில் புதுப் படம் ஏதும் இல்லையாம். அவர் நடித்து வெளியானகள்வனின் காதலி ஊத்திக் கொண்டு விட்டதால் புதுப் படம் எதுவும் வரவில்லையாம்.அத்தோடு, லவ் வேவில் அவர் சிக்கியுள்ளதால் அவரை அணுகவேதயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அஞ்சுகிறார்களாம். அன்புக்குரியவரின் படம் மட்டுமே இப்போது அம்மணியின் கையில் உள்ளதாம்.கைவித்தைக்காரரின் அஜலகுஜலாக்களில் அம்மணி மெய்மறந்து போயிருப்பதால்புதுப் படம் வரவில்லையே என்று கவலைப்படவில்லையாம். அதேசமயம்,தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயனா.தமிழில் விழுந்துள்ள கேப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தெலுங்கில் நடித்துதுட்டைத் தேத்திக் கொண்டிருக்கிறார். அங்கு அம்மணிக்கு ரொம்ப கிராக்கியாம்.அத்தோடு சம்பளமும் அங்கு ஜாஸ்தி என்பதால் தெலுங்குக்கே இப்போதுமுன்னுரிமை கொடுக்கிறார் நயனா.அப்படியே தெலுங்கி டிவி விளம்பரப் படங்களிலும் நயனாவுக்கே செம மவுசு. அந்தவகையிலும் துட்டு தேத்துகிறார்.இன்னொரு முன்னணியான ஆசின், சத்தத்தையே காணோம். புதுசா ஒரு படமும்சேச்சி கையில் இல்லையாம். ஆனால் அதற்குப் பதில், ஏகப்பட்ட விளம்பரப்படங்கள் குவிந்து கிடக்கிறதாம்.புதிய படம் எதிலும் நடிக்காமல் கிடைத்த கேப்பில், விளம்பரப் படங்களில் நடித்துடைம் பாஸ் செய்தபடி பணம் தேத்தி வருகிறாராம் ஆசின்.இதேபோல ரேணுகா மேனன் மார்க்கெட்டும் படு டல். கடைசியாக நடித்து வெளியானகலாபக் காதலன்தான் ரேணுவுக்கு இப்போதைக்கு கடைசி படமாம். புதுப் படம்இல்லாததால் இந்திக்குப் போய் விடலாமா என்று யோசிக்கிறாராம் ரேணுகா.காரணம், மலையாளத்திற்கு மீண்டும் போகலாம் என்றால் அங்கு அவருக்கு ஆதரவுதர தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தயாராக இல்லை.மலையாளத்தில் கிளாமர் காட்ட மாட்டேன் என்று படு பிடிவாதம் பிடித்து விட்டு,தமிழில் கரைபுரண்டு ஓடிய காரணத்தால் ரேணுகா மீது மலையாளத்து ஆசாமிகள் படுகடுப்பாக இருக்கிறார்கள். இதனால் மறுபடியும் மலையாளப் பக்கம் போக முடியாதநிலை.இதனால் சேபாக இந்தியில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார். சான்ஸ் கிடைக்குமாஎன்றுதான் தெரியவில்லை.த்ரிஷாவுக்கும் இப்போதைக்கு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் மட்டும்தான்உள்ளது. பீமாவில் விக்ரமுடன் ஜோடி சேரப் போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்,அம்புட்டுதான்!இப்படி ஒரு சேர ஒட்டுக்கா அத்தனை நடிகைகளும் சும்மா இருக்கும் நிலைஏற்பட்டிருப்பதை கோலிவுட்டில் மிக விசேஷமாக பேசுகிறார்கள்.படத்துக்குப் படம் இன்னா ஆட்டம் போட்டாங்கோ, இப்போ இன்னாச்சு பாத்தியாஎனும் அவர்களின் கலாய்ப்பால் இந்த நடிகைகளின் டென்சன் மேலும் அதிகரித்துவருகிறதாம்.என்ன ஆச்சு கோலிவுட்டுக்கு...

    By Staff
    |

    கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு இது போதாத காலம் போலும்.பெரும்பாலான நடிகைகளுக்கு புதிதாக எந்தப் படம் வரவில்லையாம்.

    இதனால் டாப்பை மாற்றலாமா என்று டாப் ஸ்டார்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.


    நயனதாராவுக்கு கையில் புதுப் படம் ஏதும் இல்லையாம். அவர் நடித்து வெளியானகள்வனின் காதலி ஊத்திக் கொண்டு விட்டதால் புதுப் படம் எதுவும் வரவில்லையாம்.

    அத்தோடு, லவ் வேவில் அவர் சிக்கியுள்ளதால் அவரை அணுகவேதயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அஞ்சுகிறார்களாம்.

    அன்புக்குரியவரின் படம் மட்டுமே இப்போது அம்மணியின் கையில் உள்ளதாம்.

    கைவித்தைக்காரரின் அஜலகுஜலாக்களில் அம்மணி மெய்மறந்து போயிருப்பதால்புதுப் படம் வரவில்லையே என்று கவலைப்படவில்லையாம். அதேசமயம்,தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயனா.

    தமிழில் விழுந்துள்ள கேப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தெலுங்கில் நடித்துதுட்டைத் தேத்திக் கொண்டிருக்கிறார். அங்கு அம்மணிக்கு ரொம்ப கிராக்கியாம்.அத்தோடு சம்பளமும் அங்கு ஜாஸ்தி என்பதால் தெலுங்குக்கே இப்போதுமுன்னுரிமை கொடுக்கிறார் நயனா.

    அப்படியே தெலுங்கி டிவி விளம்பரப் படங்களிலும் நயனாவுக்கே செம மவுசு. அந்தவகையிலும் துட்டு தேத்துகிறார்.


    இன்னொரு முன்னணியான ஆசின், சத்தத்தையே காணோம். புதுசா ஒரு படமும்சேச்சி கையில் இல்லையாம். ஆனால் அதற்குப் பதில், ஏகப்பட்ட விளம்பரப்படங்கள் குவிந்து கிடக்கிறதாம்.

    புதிய படம் எதிலும் நடிக்காமல் கிடைத்த கேப்பில், விளம்பரப் படங்களில் நடித்துடைம் பாஸ் செய்தபடி பணம் தேத்தி வருகிறாராம் ஆசின்.

    இதேபோல ரேணுகா மேனன் மார்க்கெட்டும் படு டல். கடைசியாக நடித்து வெளியானகலாபக் காதலன்தான் ரேணுவுக்கு இப்போதைக்கு கடைசி படமாம். புதுப் படம்இல்லாததால் இந்திக்குப் போய் விடலாமா என்று யோசிக்கிறாராம் ரேணுகா.

    காரணம், மலையாளத்திற்கு மீண்டும் போகலாம் என்றால் அங்கு அவருக்கு ஆதரவுதர தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தயாராக இல்லை.

    மலையாளத்தில் கிளாமர் காட்ட மாட்டேன் என்று படு பிடிவாதம் பிடித்து விட்டு,தமிழில் கரைபுரண்டு ஓடிய காரணத்தால் ரேணுகா மீது மலையாளத்து ஆசாமிகள் படுகடுப்பாக இருக்கிறார்கள். இதனால் மறுபடியும் மலையாளப் பக்கம் போக முடியாதநிலை.

    இதனால் சேபாக இந்தியில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார். சான்ஸ் கிடைக்குமாஎன்றுதான் தெரியவில்லை.


    த்ரிஷாவுக்கும் இப்போதைக்கு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் மட்டும்தான்உள்ளது. பீமாவில் விக்ரமுடன் ஜோடி சேரப் போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்,அம்புட்டுதான்!

    இப்படி ஒரு சேர ஒட்டுக்கா அத்தனை நடிகைகளும் சும்மா இருக்கும் நிலைஏற்பட்டிருப்பதை கோலிவுட்டில் மிக விசேஷமாக பேசுகிறார்கள்.

    படத்துக்குப் படம் இன்னா ஆட்டம் போட்டாங்கோ, இப்போ இன்னாச்சு பாத்தியாஎனும் அவர்களின் கலாய்ப்பால் இந்த நடிகைகளின் டென்சன் மேலும் அதிகரித்துவருகிறதாம்.

    என்ன ஆச்சு கோலிவுட்டுக்கு...

      Read more about: whats happening in kollywood
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X