Don't Miss!
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கனும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
விந்தியவாசினி கோவிலில் ஐஸ்-அபிஷேக்
உ.பி. மாநிலம் மிர்ஸாபூரில் உள்ள பிரபல விந்தியவாசினி கோவிலில் நடிகர் அபிஷேக் பச்சனும், அவரைமணந்து கொள்ளப் பாகும் ஐஸ்வர்யா ராயும் வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.ஐஸ்வர்யாவுக்கு சிலதோஷங்கள் உள்ளதால் பல்வேறு கோவில்களுக்கும் இருவரும் ஜோடியாகப் போய்அர்ச்சனைகள், பரிகாரங்கள், சிறப்புப் பூஜைகளை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் அமிதாப்பின் குடும்ப நண்பரும், சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங்கின்51வது பிறந்த நாள் விழா மிர்ஸாபூரில் நடந்தது. இதற்காக அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் வந்தார்.
வாரணாசியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மிர்ஸாபூர் வந்த அவர்கள் நேராக விந்தியவாசினி கோவிலுக்குச்சென்றனர்.அங்கு ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் சிறப்பு பகவதி பூஜையை நடத்தினர். பின்னர் கோவிலில்வழங்கப்பட்ட குங்குமத்தை பெற்றுக் கொண்டனர்.
அந்தக் குங்குமத்தை ஐஸ்வர்யாவின் நெற்றியில் வைத்த அபிஷேக் தானும் வைத்துக் கொண்டார். பின்னர்கோவிலுக்கு தங்கக் கொடை, மூக்குத்தியை காணிக்கையாக கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது அமிதாப் குடும்பத்தினருக்காகவும், ஐஸ், அபி நலனுக்காகவும் 16 வகையான பூஜைகள்நடத்தப்பட்டதாம். அதன் பின்னர் அமர்சிங் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அமிதாப் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.