twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்-அபிஷேக்.. சென்னை சென்னையில் நடிகை ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் சங்கம் தியேட்டர்வளாகத்தில் உள்ள தியேட்டர்களில் மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகளைஅடுத்தடுத்துப் பார்த்து குதூகளித்தனர்.முதலில் சல்மான் கான், பின்னர் விவேக் ஓபராய் என ஆளை மாற்றிக் கொண்டே வந்தஐஸ்வர்யா ராய், இப்போது அபிஷேக் பச்சனைக் காதலித்து வருகிறார். இந்தக் காதல்அனேகமாக கல்யாணத்தில் முடியக் கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.இந் நிலையில், கடந்த வாரம் ஒரு மாலையில் ஐஸும், அபியும் சத்யம் தியேட்டர்வளாகத்திற்கு திடீரென வந்தனர். வருகிறோம் என்று சொல்லாமல் இருவரும்வந்ததால் தியேட்டர் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது மிஷன் இம்பாசிபிள்-3 என்ற படம் ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்க வேண்டும் என்று ஐஸ், அபிஷேக்கும் விரும்பினர்.இதையடுத்து இரு வரிசைகளை ஐஸ்சுக்கு ஒதுக்கிய தியேட்டர் நிர்வாகம் இருவரையும்தனிமையில் படம் பார்க்க விட்டனர். பின் வரிசையில் இவர்களது பாதுகாவலர்கள்அமர்ந்தனர்.அந்தப் படம் முடிந்ததும், கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்த இருவரும்,இன்னொரு தியேட்டருக்குள் புகுந்தனர். அங்கு எக்ஸ்மென் 3 என்ற படம் ஓடியது.அந்தப் படத்தையும் இருவரும் சேர்ந்து பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியேவந்த ஐஸ்வர்யாவிடம் ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள, ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார்.பின்னர் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற ஜோடி விடிய விடிய நடனத்தில் ஈடுபட்டனர்.அதிகாலையில்தான் ஐஸ், அபிஷேக் ஓட்டம் முடிவுக்கு வந்தது.

    By Staff
    |
    சென்னையில் நடிகை ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் சங்கம் தியேட்டர்வளாகத்தில் உள்ள தியேட்டர்களில் மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகளைஅடுத்தடுத்துப் பார்த்து குதூகளித்தனர்.

    முதலில் சல்மான் கான், பின்னர் விவேக் ஓபராய் என ஆளை மாற்றிக் கொண்டே வந்தஐஸ்வர்யா ராய், இப்போது அபிஷேக் பச்சனைக் காதலித்து வருகிறார். இந்தக் காதல்அனேகமாக கல்யாணத்தில் முடியக் கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    இந் நிலையில், கடந்த வாரம் ஒரு மாலையில் ஐஸும், அபியும் சத்யம் தியேட்டர்வளாகத்திற்கு திடீரென வந்தனர். வருகிறோம் என்று சொல்லாமல் இருவரும்வந்ததால் தியேட்டர் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது மிஷன் இம்பாசிபிள்-3 என்ற படம் ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்க்க வேண்டும் என்று ஐஸ், அபிஷேக்கும் விரும்பினர்.

    இதையடுத்து இரு வரிசைகளை ஐஸ்சுக்கு ஒதுக்கிய தியேட்டர் நிர்வாகம் இருவரையும்தனிமையில் படம் பார்க்க விட்டனர். பின் வரிசையில் இவர்களது பாதுகாவலர்கள்அமர்ந்தனர்.

    அந்தப் படம் முடிந்ததும், கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்த இருவரும்,இன்னொரு தியேட்டருக்குள் புகுந்தனர். அங்கு எக்ஸ்மென் 3 என்ற படம் ஓடியது.

    அந்தப் படத்தையும் இருவரும் சேர்ந்து பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியேவந்த ஐஸ்வர்யாவிடம் ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள, ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார்.

    பின்னர் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற ஜோடி விடிய விடிய நடனத்தில் ஈடுபட்டனர்.அதிகாலையில்தான் ஐஸ், அபிஷேக் ஓட்டம் முடிவுக்கு வந்தது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X