Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மொஹாலியில் தனுஷ் - ஐஸ்வர்யா!
இந்த முறை இந்தியா - பாகிஸ்தான் ஆடும் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைக் காண கணவர் தனுஷிடன் மொஹாலிக்கே பறந்துவிட்டார் ஐஸ்வர்யா.
டெல்லியில் ஆளைப் பிடித்து எப்படியோ இரண்டு டிக்கெட்களைப் பெற்றுவிட்ட தனுஷும் ஐஸ்வர்யாவும் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி போனார்கள். இரவு டெல்லியில் தங்கிவிட்டு, காலையில் மொஹாலிக்குப் போய்விட்டனர்.
இது ஒரு சரித்திர முக்கியத்துவம் மிக்க போட்டி. கண்டிப்பாக நேரில் போய் பார்க்க வேண்டும் என முன்பே முடிவு செய்துவிட்டேன். தீவிர கிரிக்கெட் ரசிகையான ஐஸ்வர்யாவுடன் மாட்ச் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம்தான், என்று கூறினார் தனுஷ்.
ஐஸ்வர்யா கூறுகையில், கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் அதன் கடவுள் என்ற ரசிகர்களின் கருத்துதான் எனக்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இந்தியா ஜெயிக்கனும், சச்சின் செஞ்சுரி போடணும். இதான் என் பிரார்த்தனை, என்றார்.
அதே பிரார்த்தனைதான் 100 கோடி இந்தியர்களுக்கும்!!