twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விரைவில் ஐஸ்-அபிஷேக் திருமணம் அமிதாப்பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடைபெறும் என அவர்களது ஜாதகங்களைப் பார்த்த பெங்களூர் ஜோதிடர் உறுதிப்படுத்தியுள்ளார். முதலில் சல்மான்கான் பின்னர் விவேக் ஓபராய் என இரண்டு முறை பரபரப்பு காதலில் ஈடுபட்ட ஐஸ்வர்யா ராய் தற்போது அபிஷேக் பச்சனை தீவிரமாக காதலித்து வருகிறார். இதுகுறித்து செய்திகள் வெளியானபோது இருவருமே இதை மறுக்கவில்லை. இந் நிலையில் இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் கொடுத்து விட அதைத் தொடர்ந்து அமிதாப்பின் தம்பி அஜிதாப் பச்சன் பெங்களூர் விரைந்தார். அங்குள்ள அவர்களது குடும்ப ஜோதிடர் சந்திரசேகர் சுவாமிஜியை சந்தித்து அபிஷேக் மற்றம் ஐஸ்வர்யாவின் ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்த்துள்ளார். இருவரது ஜாதகங்களும் நன்றாக பொருந்தி வருவதாகவும், திருமணம் செய்தால் ஓஹோவென இருப்பார்கள் எனவும் ஜோதிடர் சந்திரசேகர் சுவாமிஜி, தெரிவித்துள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் சுவாமிஜியிடம் கேட்டபோது, அஜிதாப் பச்சன் பெங்களூருக்கு வந்திருந்தபோது என்னிடம் வந்தது உண்மைதான். ஐஸ்ர்யா ராய் மற்றும் அபிஷேக்கின் ஜாதகங்களைக் காட்டி பொருத்தும் பார்க்கக் கோரினார். நானும் பார்த்துக் கொடுத்தேன். இருவரது ஜாதகங்களும் அற்புதமாக பொருந்தியுள்ளதாக அஜிதாப்பிடம் தெரிவித்தேன். அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாவும் தீவிரமாக காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளவும் மிகவும் ஆவலாக உள்ளனர். இன்னும் 2 மாதங்களில் அவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என்றார் சந்திரசேகர் சுவாமிஜி. சந்திரசேகர் சுவாமிஜி தற்போது மும்பை சென்றுள்ளார். அங்கு அமிதாப்பச்சனையும், அவரது மனைவி ஜெயா பச்சனையும் சந்தித்து திருமணம் தொடர்பாக அவர் விரிவாக பேசவுள்ளதாக தெரிகிறது.

    By Staff
    |

    அமிதாப்பச்சனின் மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடைபெறும் என அவர்களது ஜாதகங்களைப் பார்த்த பெங்களூர் ஜோதிடர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    முதலில் சல்மான்கான் பின்னர் விவேக் ஓபராய் என இரண்டு முறை பரபரப்பு காதலில் ஈடுபட்ட ஐஸ்வர்யா ராய் தற்போது அபிஷேக் பச்சனை தீவிரமாக காதலித்து வருகிறார். இதுகுறித்து செய்திகள் வெளியானபோது இருவருமே இதை மறுக்கவில்லை.


    இந் நிலையில் இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் கொடுத்து விட அதைத் தொடர்ந்து அமிதாப்பின் தம்பி அஜிதாப் பச்சன் பெங்களூர் விரைந்தார்.

    அங்குள்ள அவர்களது குடும்ப ஜோதிடர் சந்திரசேகர் சுவாமிஜியை சந்தித்து அபிஷேக் மற்றம் ஐஸ்வர்யாவின் ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்த்துள்ளார். இருவரது ஜாதகங்களும் நன்றாக பொருந்தி வருவதாகவும், திருமணம் செய்தால் ஓஹோவென இருப்பார்கள் எனவும் ஜோதிடர் சந்திரசேகர் சுவாமிஜி, தெரிவித்துள்ளார்.


    இதுகுறித்து சந்திரசேகர் சுவாமிஜியிடம் கேட்டபோது, அஜிதாப் பச்சன் பெங்களூருக்கு வந்திருந்தபோது என்னிடம் வந்தது உண்மைதான். ஐஸ்ர்யா ராய் மற்றும் அபிஷேக்கின் ஜாதகங்களைக் காட்டி பொருத்தும் பார்க்கக் கோரினார். நானும் பார்த்துக் கொடுத்தேன். இருவரது ஜாதகங்களும் அற்புதமாக பொருந்தியுள்ளதாக அஜிதாப்பிடம் தெரிவித்தேன்.

    அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாவும் தீவிரமாக காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளவும் மிகவும் ஆவலாக உள்ளனர். இன்னும் 2 மாதங்களில் அவர்களது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என்றார் சந்திரசேகர் சுவாமிஜி.


    சந்திரசேகர் சுவாமிஜி தற்போது மும்பை சென்றுள்ளார். அங்கு அமிதாப்பச்சனையும், அவரது மனைவி ஜெயா பச்சனையும் சந்தித்து திருமணம் தொடர்பாக அவர் விரிவாக பேசவுள்ளதாக தெரிகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X